சனி, 14 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :846


திருக்குறள் -சிறப்புரை :846
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி. --- ௮௪௬
தம்மிடத்து உள்ள குற்றங்களை உணர்ந்து அவற்றைப் போக்கிக்கொள்ள முயலாது, தம் உடம்பை மட்டும் ஆடையால் மறைத்துக்கொள்வது புல்லறிவாளர் செயலாகும்.
“உடுக்கை உலறி உடம்பு அழிந்தக் கண்ணும்
குடிப்பிறப்பாளர் தம் கொள்கையில் குன்றார்.” –நாலடியார்.
ஆடைகள் கிழிந்து,உடல் தளர்ந்து வறுமையுற்றுத் துன்புற்றாலும் நற்குடியில் பிறந்தார் நல்லொழுக்கமாகிய தம் கொள்கையில் சிறிதும் குறைய மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக