செவ்வாய், 24 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :856


திருக்குறள் -சிறப்புரை :856
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து. --- ௮௫௬
பிறரை இகழ்வதே இன்பம்  என்று கருதி அதனை மிகவும் விருப்பமுடன் செய்வானது வாழ்க்கை, அமைதியின்றித்  துன்புறுதலும் அழிவதும் விரைந்து நடக்கும்.
“ கோத்து இன்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல கனைத்து. “ –நாலடியார்.
பிறரைக் குறை கூறாவிட்டால் பேதையின் நாக்கில் தினவு ஏற்பட்டு அரிப்பு எடுக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக