வியாழன், 12 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :845


திருக்குறள் -சிறப்புரை :845
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும். --- ௮௪௫
புல்லறிவாளன் தான் கற்றறியாத நூல்களையும்  கற்றுத் தேர்ந்தவன்போல் உரையாடுவது அவன் குற்றமறக் கற்ற பிற நூல்களின்கண்ணும் பிறருக்கு ஐயம் ஏற்பட இடம்தரும்.
“ நாப்பாடம் சொல்லி நயம் உணர்வார் போல் செறிக்கும்
தீப்புலவன் சேரார் செறிவு உடையார் …” –நாலடியார்.
(நா பாடம்)
அவையோர் முன் வாய்க்குவந்த பாடத்தைச் சொல்லி நூல் நயம் கற்றவர்போல் விரித்துரைக்கின்ற அறிவுகெட்ட புலவனோடு சான்றோர் உரையாட விரும்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக