திங்கள், 23 ஏப்ரல், 2018


திருக்குறள் -சிறப்புரை :855
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர். --- ௮௫௫
(இகல் எதிர்; சாய்ந்து ஒழுக ; மிகல் ஊக்கும்)
மனத்தில் காழ்ப்பு உணர்வு தோன்றும் பொழுது அதனைப் புறந்தள்ளி, இயல்பாக நடந்துகொள்ளும் வல்லமை உடையவர்களை வெல்லக்கருதும் தன்மை உடையவர்கள் யாவர் ? ஒருவரும் இல்லை என்பதாம்.
“ இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே.” ---புறநானூறு.
இவ்வுலக வாழ்க்கை துன்பம் நிறைந்தது; உலக இயல்பு உணர்ந்தவர்களே , வாழ்வில் இனிமை காண்பர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக