ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

திருக்குறள் -சிறப்புரை :854


திருக்குறள் -சிறப்புரை :854
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.---- ௮௫௪
துன்பத்துள் கொடிய துன்பமாகிய காழ்ப்புணர்ச்சி கெட்டு ஒழியுமாயின்  அந்நிலையே இன்பத்துள் சிறந்த இன்பத்தைக் கொடுக்கும்.
“உள் இல்லோர்க்கு வலி ஆகுவன்
கேள் இல்லோர்க்குக் கேள் ஆகுவன்.” –புறநானூறு.
வாட்டாற்று எழினியாதன், ஊக்கம் இல்லாதார்க்கு உரமாகித் துணை செய்வான்; சுற்றம் இல்லாதார்க்கு உறவாகி மகிழ்ச்சி அளிப்பான்.

2 கருத்துகள்:

  1. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    பதிலளிநீக்கு
  2. நாம் தவிர்க்கப்பட வேண்டியனவற்றுள் ஒன்று காழ்ப்புணர்ச்சி. உண்மைதான் ஐயா.

    பதிலளிநீக்கு