வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :18. மாங்குடி மருதனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :18. மாங்குடி மருதனார்.

 குடவோலைத் தேர்தல்.

                      இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாட்டை ஆளும் அமைப்புமுறைகளைச் செவ்வனே செயல்படுத்தி வந்துள்ளனர் என்பதை மிகத்தெளிவாக அறியமுடிகிறது.

                            “வரலாற்றில் மிகவும் முற்பட்ட பண்டைய கிரேக்கம் மற்றும் பண்டைய ரோமானியர்கள் காலத்திலேயே தேர்தல்கள் அமலுக்கு வந்துவிட்டிருந்தன. மத்திய காலக் கட்டத்தில் புனித ரோமானிய பேரரசர் மற்றும் போப்பாண்டவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இருந்தது. அரசாங்கப் பதவிகளுக்காகப் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் நவீன ‘தேர்தல்’ முறை 17ஆம் நூற்றாண்டுவரை உருவாக வில்லை,அந்தக் காலக்கட்டத்தில்தான், பிரதிநிதித்துவ அரசாங்கம் என்ற கருத்தாக்கம் வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் எழுந்த து .” விக்கிப்பீடியா.

  தமிழ்நாட்டில் குடவோலைத் தேர்தல்:

“கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்

பொறி கண்டழிக்கும் ஆவண மாக்களின்.” – மாங்குடி மருதனார், அகநானூறு: 77.

ஊராண்மைக் கழங்கட்கு உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தற் பொருட்டு, உடன்பாடு தெரிவிக்கும் தகுதியுடையார் பலரும் எழுதிக் குடத்தின்கண் போட்ட ஓலைகளை, ஆவண மாக்கள் பலர்முன் குட்த்தின் மேலிட்ட இலச்சினையைக் கண்டு, நீக்கி உள்ளிருக்கும் ஓலைகளை எடுத்து எண்ணித் தேரப்பட்டார் இவரென முடிபு செய்வதோர் வழக்கத்தினைக் குறிப்பது. இது குடவோலை  என்று கூறப்படும். பழைய கல்வெட்டுக்களில் இம்முறை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. – அறிஞர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை,.

 இன்றும் பலர் குடவோலைத் தேர்தல்  குறித்து உத்திரமேரூர் கல்வெட்டுச் செய்தியையே கூறிவருகின்றனர்.

உத்திரமேரூர் கல்வெட்டில் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் குடவோலை முறையில் தேர்தல் நடந்ததாகக் குறிக்கப்பட்டுள்ளது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொல் தமிழகத்தில் குடவோலை முறையில் தேர்தல் நடந்ததற்கான சான்று அகநானூற்றில் கிடைத்துள்ளது. இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவே மிகவும் தொன்மைவாய்ந்த  தேர்தல் நடமுறையாகும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக