சனி, 31 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :24.நக்கீரர்-முத்தமிழ் முருகன்

 

சான்றோர் வாய் (மை) மொழி :24.நக்கீரர்-முத்தமிழ் முருகன்

முருகன் வழிபாடு குறித்து நக்கீரர்…..

“ ஆடுகளம் சிலம்பப் பாடி பலவுடன்

கோடுவாய் வைத்து கொடுமணி இயக்கி

ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி

வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட

ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே…” – திருமுருகாற்றுப்படை : 245 – 249.

                        வெறியாட்டுக் களம் ஆரவாரிக்கும்படி பாடி ஊதுகொம்புகள் பலவற்றையும் சேர ஊதி, மணியை ஒலித்து, முருகப்பெருமானுடைய யானையை வாழ்த்தி, குறை வேண்டினார் தாம் வேண்டியவற்றைப் பெற்றார் போன்று நின்று வழிபாடு செய்ய , முருகப்பெருமான் அவ்விடங்களில் தங்குதலும் உரியன்.( பிணிமுகம் என்பதற்குப் பெரும்பாலும் மயில் என்று பொருள் கூறுவர் ; பிணிமுகம் என்பது முருகன் ஏறும் யானை ஒன்றற்கே  பெயர் என்பாரும் உளர்.)

                தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ள தமிழர்தம் கடவுள் வழிபாடு, பின்னாளில் புராணங்களில் புனைந்துரைகளாக இடம்பெற்றுள்ளன. தமிழர் புராண இதிகாச பொய்யுரைகளைப் புறந்தள்ளி, நக்கீரர் கூறியவாறு முருகனை வழிபட்டால் வேண்டியதை வேண்டியவாறு  பெறுலாம் என்பதைக் கருத்தில் கொண்டு முருகனை வழிபடவும்.

(சிலம்புதல் – ஒலித்தல் ; கொடுமணி – வளைவு பொருந்திய மணி ; வாய் வைத்து – ஊதி.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக