ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :25. மாறோக்கத்து நப்பசலையார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :25. மாறோக்கத்து நப்பசலையார்.

பொருநன் பாடுங்காலம்.

”ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்று எழுந்து

தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்

நுண்கோல் சிறுகணை சிலம்ப ஒற்றி

நெடுங்கடை நின்று பகடுபல வாழ்த்தி..”- புறநானூறு: 383,1 – 4.

     ஒள்ளிய பொறிகளை உடைய சேவல் எழுப்பத் துயில் உணர்ந்து எழுந்து, குளிர்ந்த பனிதுளிர்க்கும் புலராத விடியற்காலத்தே, நுண்ணிய கோல்கொண்டு,தடாரிப் பறையை முழங்க அடித்து, நெடிய வாயிற்கடை நின்று, பலவாகிய உழவு எருதுகளை வாழ்த்தி……. பொருநன் பாடுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக