திங்கள், 2 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :26.சிறுவெண்தேரையர்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :26.சிறுவெண்தேரையர்.

தாரை வார்த்துக் கொடுத்தல்.

“ஆக்குரல் காண்பின் அந்தணாளர்

நான்மறைக் குறி……..யின்

அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின்

மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ

கைபெய்த நீர் கடற்பரப்ப…’- புறநானூறு. 362.

                           அந்தணாளர்களே ….! நான்கு மறைகளிலும்…….. புறத்துறையாகிய பொருள் குறித்தலின் அறநூல்களிலும் குறிக்கப்படுவதும் அன்று, மருக்கையினின்றும் நீங்கி மயக்கத்தையும் போக்கி, கொடுத்தற்பொருட்டுப் பார்ப்பார்தம் கைகளில் பெய்த தாரை நீர் கடல் அளவும் பரந்து சென்றது.

”ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து..”ஒளவையார், புறநானூறு. 367. பொருளை யாசித்து நின்ற பார்ப்பார்க்கு, குளிர்ந்த கை நிறையும் வண்ணம் பொற்பூவும் பொற்காசும் தாரை (நீர்) வார்த்துக் கொடுத்தும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக