புதன், 25 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 43. இளங்கோவடிகள்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 43. இளங்கோவடிகள்.

தன் பயனை ஊட்டும் வல்வினை.

”ஒழிக என ஒழியாது ஊட்டும் வல்வினை

இட்டவித்தின் எதிர்வந்து எய்தி

ஒட்டும் காலை ஒழிக்கவும் ஒண்ணா..” –சிலப்பதிகாரம்: 10; 171-173.

                ஒழிக என வேண்டினாலும் ஒழியாது,  தானே முன்வந்து தன் பயனை ஊட்டக்கூடியது வல்வினையாம் ; நிலத்தில் இட்ட வித்தினைப்போல ஒன்றுக்குப் பத்தாகப் பெருகி உரியவரை வந்து சேரும் அதை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக