வியாழன், 12 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 32. கபிலர்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 32. கபிலர்.

இடித்துரைத்தல்

”நின்னும் நின் மலையும் பாட இன்னாது

இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்

முலையகம் நனைப்ப விம்மி

குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே

….”புறநானூறு., 12 -15.

அச்சிற்றூரில் ஒரு வீட்டின் வாயிற்கண் தோன்றி நின்று நின்னையும் நின் மலையையும் வாழ்த்திப் பாடினோம் ; அப்பொழுது இன்னாதாகச் சொரிந்த கண்ணீரை அடக்க மாட்டாதவளாய் முலையிடம் நனைப்பப் பொருமி குழல் இரங்கி ஒலிப்பதுபோல் ஒருத்தி மிகவும்  அழுதால் ; மயிலுக்குக் கொடை நல்கிய பேகன் தன் மனைவி கண்ணகியை அழுமாறு துன்பப்படவிடலாமா என்னும் கருத்தை மறை பொருளாக வைத்துப் புலவர் அறிவுறுத்துகின்றார்.

காதல்  அன்புடைய மனைவியும் கணவனும் பிரிந்திருப்பின் இருவரையும் ஒன்றுபடுத்தி வாழ்வு இனிது நடக்குமாறு செய்தல் பண்டைத் தமிழ்ச் சான்றோராகிய புலவர்களின் இயல்பு, அச்செயலையே பரணர், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் போன்ற புலவர்கள் செய்து அரசனை நல்வழிப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக