புதன், 11 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 31. பெருஞ்சித்திரனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 31. பெருஞ்சித்திரனார்.

முதுமையும் வறுமையும்

“பால் இல் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்

கூழும் சோறும் கடைஇ ஊழின்

உள் இல் வறுங்கலம் திறந்து அழக்கண்டு

மறப்புலி உரைத்தும் மதியம் காட்டியும்

நொந்தனளாகி………………………….” புறநானூறு, 160: 15 – 19.

                  இளம் புதல்வன் பால் இல்லாத வற்றிய முலையைச் சுவைத்துப் பால் பெறானாய்க் கூழையும் சோற்றையும் வேண்டி உள்ளே ஒன்றுமில்லாத வறிய சோற்றோடு கலத்தைத் திறந்து பார்த்து,  அதில் உணவைக் காணாது வருந்தி அழுகின்றான் ; அவன் அழுகையை நிறுத்த, காட்டில் உறையும் மறப்புலி வருகின்றது என்று சொல்லி அச்சுறுத்தியும்  நிலவைக் காட்டியும் அவற்றால் தணிக்க இயலாது வருந்தினாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக