வெள்ளி, 13 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 33. வெள்ளைக்குடி நாகனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 33. வெள்ளைக்குடி நாகனார்.

இயற்கையும் செயற்கையும்

“மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்

இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்

காவலர்ப் பழிக்கும் இக்கண்ணகன் ஞாலம்…” புறநானூறு,35: 27 – 29.

                     மழை பெய்யாவிட்டாலும் விளைவு இல்லாவிட்டாலும் இயல்பு அல்லாதன மக்களது தொழிலிலே தோன்றினும் இவ்விடமகன்ற உலகம் , நாட்டை ஆளும் காவலனைப் பழிக்கும்.

                   என்னே…! சங்கப்புலவரின் தொலைநோக்குச் சிந்தனை, இயற்கை அல்லன செயற்கையால் தோன்றுமாம். அஃதாவது, மக்கள் தொழிலால் தோன்றுமாம். காடழித்தல், மணல் கொள்ளையடித்தல், நெகிழி பயன்படுத்துதல், காற்றை மாசுபடுத்தல், நீரை நஞ்சாக்குதல் இன்னபிற  கொடுமைகளை மக்கள் செய்கின்றனரே இவற்றையே செயற்கையால் இயற்கையை அழித்தல் என்றார் புலவர்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக