திங்கள், 30 செப்டம்பர், 2024

 

இலாவோசு 

என்று அழைக்கப்படும் இலாவோசு மக்கள் குடியரசு (ஆங்கிலம்Lao People's Democratic Republicஇலாவோசு மொழிສາທາລະນະລັດ ປະຊາທິປະໄຕ ປະຊາຊົນລາວSathalanalat Paxathipatai Paxaxôn Lao); தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும்.

இந்த நாட்டின் வடமேற்கில் சீனாமியன்மார்; கிழக்கில் வியட்நாம்; தெற்கில் கம்போடியா; மேற்கில் தாய்லாந்து ஆகிய நாடுகள் அமைந்து உள்ளன.

தற்கால இலாவோசு, பழைய இலாவோசிய அரசான லான் சாங் எனும் அரசின் கலாச்சாரத்தை அடையாளப் படுத்துகிறது. அந்த லான் சாங் அரசு (Lan Xang) 14-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய அரசுகளில் ஒன்றாக விளங்கியது.[3]

தற்கால லாவோஸ், பழைய லாவோசிய அரசான லான் சாங் எனும் அரசின் கலாச்சாரத்தை அடையாளப் படுத்துகிறது. அந்த லான் சாங் அரசு (Lan Xang) 14-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய அரசுகளில் ஒன்றாக விளங்கியது.

லாவோஸ் நாடு தென்கிழக்கு ஆசியாவின் ஒரு மையப் பகுதியில் அமைந்து உள்ளது. அதன் காரணமாக, இந்த அரசு ஒரு வர்த்தக மையமாக மாறியது. அதே வேளையில் பொருளாதார ரீதியாகவும் கலாசார ரீதியாகவும்செல்வம் செழிக்கும் நாடாகவும் மாறியது.[3]

கடந்த நாற்பது நாட்களாக இலாவோ நாட்டின் தலைநகர்வியண்டைன் நகரில் இருந்து வருகிறேன். பொதுவுடைமைக் கட்சியின் ஆட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றுவருவதைப் பார்த்துவருகிறேன். நாட்டின்  இயற்கை அழகை அவ்வளவு எளிதாக எடுத்துக்கூறவிட முடியாது.  மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மனிதநேயமிக்க மக்களை நாள்தோறும் கண்டுவருகிறேன்.  மக்கள் நம்முடைய தோற்றத்தைக் கண்டு இந்தியன் என்று உணர்ந்துபோதும் அவர்கள்இளமுறுவல்உகுத்துக் கடந்து செல்வார்கள்.

 நாட்டில், சீனாவின் தொடர்வண்டித் துறை  இயங்குகிறது , தலைநகர் தொடர் வண்டி நிலையம் என்னை வியப்பில் ஆழ்த்தியது , வானூர்தி நிலையம் என்றுதான் சொல்லவேண்டும்,

……………………………………………………….தொடரும்.

 ……நாளைமறுநாள் தஞ்சாவூருக்குத் திரும்பவுள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக