செவ்வாய், 10 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :30. பெருங்குன்றூர் கிழார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :30. பெருங்குன்றூர் கிழார்.

 மக்களை வருத்தி வரி கொள்ளும் கொடுங்கோலன்.

”மன்பதை காக்கும் நின்புரைமை நோக்காது

அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு

நும்மனோரும் மற்று இனையர் ஆயின்

எம்மனோர் இவண் பிறவலர் மாதோ.” – புறநானூறு: 20, 1 – 4.

அன்பும் அறனும் இல்லா ஆட்சி. தலைவனே….! மக்களக் காக்கும் பெரும் பொறுப்பினை உணராது அன்பின்றி அறமற்ற முறையில் நீயும் நும்மை ஒத்தாரும் ஆட்சி செய்வார்களானால் எம்மைப் போன்றோர் இவ்வுலகில் பிறவாதிருத்தலே நன்று, என்று

அன்று புலவர் சொன்ன சொல் இன்றும் உண்மையே போலும்….!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக