புதன், 4 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :28. கதம்பிள்ளைச்சாத்தனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :28. கதம்பிள்ளைச்சாத்தனார்.

நல்ல நாள் பார்த்து, புத்தரிசி உணவு உண்ணல்.

“நல்நாள் வருபதம் நோக்கிக் குறவர்

உழாது வித்திய பரூஉக் குரல் சிறுதினை

முந்து விளையாணர் நாள் புதிது…” – புறநானூறு: 5 -7.

                 விதைத்தற்கும் விளைந்த தானியத்தை உண்பதற்கும் நல்ல நாள் பார்ப்பது பண்டைத் தமிழரின் வழக்கமாகும். இதனை நன்னாள் வருபதம் நோக்கி என்றும் சிறு தினை முந்து விளை யாணர் (புதிய வருவாய்) நாள் புதிது உண்மார் என்று கூறினார்.

நம் பொங்கல் பண்டிகையின் முன்னோட்டமாகக் கொள்க.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக