திங்கள், 23 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 41.பாலைபாடிய பெருங்கடுங்கோ.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 41.பாலைபாடிய பெருங்கடுங்கோ.

இளவேனில் கால இன்பம்.

”நிலன் நாவில் திரிதரூஉம் நீள்மாடக் கூடலார்

புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது.” –கலித்தொகை:35, 17,18.

                  தோழி…! நில உலகில் உள்ளார் நாவிலே தவழும் தமிழால் நீண்ட மாடங்களை உடைய மதுரை நகரில் வாழும் அறிவினை உடைய சான்றோர் நாவில் பிறந்த கவிதைகளின் புதுமையை நுகரும் இளவேனில் காலமல்லவோ இது.” என்றாள் தலைவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக