செவ்வாய், 3 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :27. கோப்பெருஞ்சோழன்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :27. கோப்பெருஞ்சோழன்.

நல்வினை ஆற்றலே நன்றாம்.

”யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்

செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்

தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்

தொய்யா உலகத்து நுகர்ச்சியும் இல் எனின்

மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்

மாறிப் பிறவார் ஆயினும்…..

எவ்வாற்றானும் நல்வினை செய்தல் நன்றே.” –புறநானூறு, 214. 4 – 12.

யானையை வேட்டையாடச் சென்றவன் எளிதாக அதனைப் பெறவும் கூடும் ; குறும்பூழ்ப் பறவையை வேட்டையாடச் சென்றவன் வெறுங்கையோடு வருதலும் உண்டு ; அதனால் உயர்ந்த குறிக்கோளுடன் நல்வினை ஆற்றியோர் உலகில் இன்பம் கூடும் ; அஃது  கூடாயின் மாறிப் பிறத்தலால் பிறப்பில்லாமையை அடையக் கூடும் ; ஓங்கிய சிகரம் போன்று தமது புகழை நிலைநிறுத்தி பழியற்ற உடலோடு இறத்தல் நன்று ; எவ்வாறாயினும் நல்வினை ஆற்றலே நன்றாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக