வியாழன், 31 ஜூலை, 2025

தமிழமுது –.85. – மடகாசுகர் –இலெமூர், அசுணம்.?

 

தமிழமுது –.85. – மடகாசுகர் –இலெமூர்,   அசுணம்.?

சங்க இலக்கியங்கள் "அசுணம்" - இலெமூர் குரங்கினத்தைக்  குறிக்கின்றனவா..?

“கவுள்மலி பிழிதரும் காமர் கடாஅம்

இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ்செத்து

இருங்கல் விடரஅளை அசுணம் ஓர்க்கும்.” –அகநானூறு: 88.

 அழகிய கன்னத்திலிருந்து பெருகிவழியும் மதநீரில் கரிய சிறகினையுடைய வண்டினம் ஒலிக்க , யாழிசை எனக் கருதி பெரிய மலையின் பிளப்பாய குகையில் உள்ள அசுணங்கள் உற்றுக்கேட்கும் , பன்றி,பல்லி, நற்பக்கத்தே செய்த ஒலியாய நிமித்தம் உணர்ந்து செழுந்தினை உண்ண வரும்.

(மேலும் காண்க: கலித்: 103 ;நற்: 244, 304 ;  சீவக: 1402.)

 

Lemur

Wikipedia

https://en.wikipedia.org › wiki

 

Most existing lemurs are small, with a pointed snout, large eyes, and a long tail. They chiefly live in trees and are active at nigh

 

Lemurs are a type of prosimian, which means they are primates that evolved before monkeys and apes. They are more primitive than their cousins but share ..

Lemurs are the world's oldest living primates. Lemur ancestors likely landed on the island of Madagascar about 70 million years ago. There are over 100 species .

Discovery Tamil ,23 -04- 14. 9 . PM. செய்திகளின் தொகுப்புரை:

 

“இந்தியா, ஆப்பிரிக்கா நிலப்பகுதிகளோடு இணைந்திருந்த பகுதி மடகாசுகர். இப்பகுதி உடைந்து 1500 கி.மீ. மலைத்தொடராகியது. இத் தீவு கிரானைட் மலைகள் சூழ்ந்த பகுதியாகும்.பகல் பொழுது வெம்மையாகவும் இரவுப் பொழுது குளிராகவும் இருக்கும். இந்நிலப்பகுதி இலெமூர் வாழிடமாகும். நிலத்தில் உள்ள பாறைப்பிளவுகளில் வாழும்.  சுற்றி, கற்றாழை, கள்ளிச் செடிகள் வளருகின்றன. நீருக்காக பருந்து இவற்றை வேட்டையாடி உண்ணும்.

இலெமூர்,  நிலத்திலும் மரத்திலும் வாழும் தகுதி உடையது. மரம் நிறைந்த இலைகளில் வீழும் பனிநீரை உண்ணும்.  பெண்குரங்கு குட்டியைச் சுமக்கும் பாறையில் ஏறும் வல்லமை உடையது. மரத்தில் உள்ள பழங்களை சேகரித்து உண்ணும் . நாள்தோறும்  புழுதியையும் மண்ணையும் உண்ணும் இவை அவற்றிற்கு மருந்தாக அமைகின்றன. இது மடகாசுகரில் நெடுங்காலம் வாழ்ந்து வரும் உயிரினமாகும்.

 மடகாசுகரில் மலைச்சரிவில் மழை வருட்த்திற்கு 5மீட்.டர் அளவு பொழியும். வடகிழக்குப் பகுதி , மேகக்காடுகள் சூழ்ந்துள்ளதால் உயிரினங்கள் செழித்து வளர்கின்றன. பறவைகள் கிழக்கு மலையில் மட்டுமே வாழ்கின்றன. விநோதி, ஹெல்மெட் புறா இம்மலையில் மட்டுமே வாழும்.

 

Discovery Tamil , 07- o4- 14. 11PM.

Pl. donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

திங்கள், 28 ஜூலை, 2025

தமிழமுது –.84 . தமிழர் - அறநெறி வாழ்வியல். பெண்டிர் பாலியல் மொழிகள்:

 

தமிழமுது –.84 . தமிழர் - அறநெறி வாழ்வியல்.

பெண்டிர் பாலியல் மொழிகள்:

 

“பாலுணர்வில் பெண் உதடுகள் சிவந்து தடுத்துவிடும்.

 

கேம்ரூன் பெண்கள் புட்டத்தில் கனமான துணிகளைச் சுற்றி அகன்ற புட்டமாகக் காட்டுவர், பாலுணர்வோடு குழந்தை பெறுவதற்குத் தயார் என்பதைக்காட்டவே அவ்வாறு செய்து கொள்வர்.

 

சீனப் பெண்கள் சிறுவயது முதலே காலில் விரல்களை விட்டுவிட்டு பாதத்தை 8 வடிவில் கயிற்றால் கட்டிச் சிறுத்துவிடச் செய்வர்,

 இந்தியாவில், கூதல் நீளமாக இருக்க வேண்டியதைச் செய்வர்.  முடியைக் குறைத்துவிட்டால் சுதந்திரம் உடையவள்.

 

 ரோமானியர்,  இராணுவத்தில் சேர முடியைக் குட்டையாக வெட்டிக் கொண்டனர். எதிரியின் பிடியில் சிக்காமல் இருக்கவும் தொப்பி அணியவும் அவ்வாறு செய்து கொண்டனர்.

 

 முடி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முன்னிலை வகிக்கின்றன. சில இடங்களில் கூந்தலை மூடிக் கொள்ள வேஎண்டும்  தேவாலயம், சடங்குகளில் பங்கேற்கும் போது இந்நிலையைக் காணலாம், ஆண்களுக்கு எவ்விதக் கட்டுபாடும் இல்லை.

 

 பாலினக் குறிகள்:

 பெண்கள் கண்களைத் தவிர உடல் முழுவதையும் மூடிக்கொள்வர்

. கண் மிகவும் சக்தி வாய்த குறி ; கண் பேசும் இக்குறி இனச் சேர்க்கைக்கு அவசியமாகிறது.  ஆழ்ந்து நோக்கும்போது கண்கள் விரிவடைந்தால் காதல் இனிக்கும். கண்கள் சுருங்கினால் ஆசை இல்லை என்பதைக்குறிக்கும். எதிர் பாலினத்திற்குக் கண் மிகவும் அவசியம். கண் பாலின ஈர்ப்புக்கு அழகு நிலையம் முதல் அறுவை மருத்துவம் வரை செல்வர்.

 

பர்மியப் பெண்கள் பருவம் சிறக்க நீண்ட கழுத்துக்கு வெண்கல வளையம் அணிவர். அதிக அளவாக 32 வட்டங்கள் கொண்டதாக இருக்கும்.

 

இந்தியாவில், பெண்கள்  செல்வ வளம், நிறம், உயர்நிலை  இவற்றை உயர்த்திக்காட்ட மாந்தளிர் மேனியை வெளுக்க வைப்பது, கவர்ச்சியான ஆடை அணிகலன்களை அணிந்துகொள்வது.

 

மெடிட்ரியேன்:கடல் பகுதி (ஐரோப்பா – வடஆப்பிரிக்கா) சன்னலுக்கு இருபக்கமும் கல் வைத்தால் கன்னிப்பெண் இருக்கிறாள் என்று பொருள். இருபக்கமும்  துளசி செடி வைத்தால் ஒரு பெண் திருமணத்திற்கு தயாராக இருக்கிறாள் என்பதாம். பெண்கள் வெளியே செல்ல முடியாது. இருமுறை செல்லலாம் 1. திருமணம், 2. கல்லறை. ஒரு பூவை வலது காதில் வைத்திருந்தால் பாலுறவுக்குச் சரி ; இடது காதில் வைத்திருந்தால் பாலுறவு இல்லை என்றாகும்.”

உலகம் முழுதும் பாலின ஆதிக்கம்  பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன..

 

சான்று:

 அடைப்புக்குறிகளுக்குள் இடம் பெற்ற செய்திகள் கீழ்க்காணும் தொலைக்காட்சியில் வெளிவந்தவையே.

Discovery Tamil , 07- o4- 14. 11PM.

Pl. donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

 

ஞாயிறு, 27 ஜூலை, 2025

தமிழமுது –.83 . தமிழர் - அறநெறி வாழ்வியல். ஆடவர், - பாலியல் மொழிகள்.- 2. .

 

தமிழமுது –.83 . தமிழர் - அறநெறி வாழ்வியல்.

ஆடவர், - பாலியல் மொழிகள்.- 2.

.

பாலுறவு உறுப்புகளுள் ஆண் உறுப்பு பெரிது மட்டுமன்று உயிர் நிலையும் அதுவே.

உயிர் நிலை மூலமாக விளங்கும் ஆண்குறி 10,000. ஆண்டுகளுக்கு முன்னர்வரை மனித உயிர்களின் தோற்றமாகக் கொள்ளப்பட்டது.

 ஜப்பானில் ஆண்குறி வழிபாடு போற்றப்படுகிறது. தாய்லாந்திலும் ஆண்குறி வழிபாடு சிறப்பானது மலர், பட்டாடை, சூடி வழிபடுகின்றனர்.

இந்தியாவில், ஆண்குறி  லிங்கம் ஒரு குறியீடாக ஆபாசம் இல்லாமல் வழிபாடு நிகழ்கிறது. உயிர் அளிக்கும் இந்தச் சின்னம் சிவன் என்று வழிபடுகின்றனர். சிவன்லிங்கம் இடம் மாறக்கூடாது.   ( சிவன் சக்தியோடு இணைந்தது கறபனைக் கதையாகலாம்) அடைப்புக்குறிகள் என்னால் இடப்பட்டவை.

 ஆடவர் மொழியில் பாலுணர்வை ஈர்ப்பதற்குபச்சைக் குத்திக்கொள்ளுதல் ; வீர தீரச் செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றால் பெண்கள் ஈர்க்கப்படுகின்றனர்.

பாலினக் குறிகள் செல்வம் + அதிகாரம் இரண்டும் தவிர்க்கவியலாதவையாக உள்ளன; இவ்விரண்டில் ஏதேனும் ஒன்று இருந்தாலே பெண்டிர் விருப்பம் கொள்வர் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. “”

 

பெண்டிர் பாலியல் மொழிகள்:

Pl. donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

சனி, 26 ஜூலை, 2025

தமிழமுது –.82 . தமிழர் - அறநெறி வாழ்வியல். ஆடவர், பெண்டிர் - பாலியல் மொழிகள்.

 

தமிழமுது –.82 . தமிழர் - அறநெறி வாழ்வியல்.

ஆடவர், பெண்டிர் - பாலியல் மொழிகள்.

பருவம் வந்துற்ற உயிர்கள் அனைத்தும் இன்பவிழைவு கொள்வதென்பது இயற்கையான நிகழ்வேதொல்காப்பியர் மிகத்தெளிவாக

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்.”

இன்பம் விழைவு என்பது உலக உயிர்கள் அனைத்திற்கும் மனம் பொருந்திவரும் விருப்பமுடைமை ஆகும் என்றார்.

ஆடவரும் பெண்டிரும் பாலுணர்வின் தூண்டுதலால் தனக்குரிய துணையைத் தேடுதலில் பல்வேறு உத்திகளை மேற்கொள்கின்றனர். பாலியல் உணர்வுகளைப் பலரும் அறிய வெளிப்படையாக வெளிப்படுத்த முடியாது.  சமுக அமைப்பின்படி இலைமறை காயாக ஒருவருக்கொருவர்  உடல் மொழிக் குறிப்புகளால்,சிறு சிறு ஒலிக் குறிப்புகளால் பரிமாறிக்கொள்வர்.   உடலைத் தீண்டும் வெறியின்றி உள்ளம் விரும்பி இசைவது, இது களவுக் காதலாகும்.  களவுக் காதல் திருமணத்தில் முடிவதும் உண்டு ; மனம் மாறி வேற்று மணம் கொள்வதும்  நிகழும். உள்ளம் கவர்ந்த காதல் நிறைவேறாமல் தற்கொலையில் முடிவதும் நிகழும்.

ஆடவர் பாலியல் மொழி :

எந்த ஒரு காரணமும் இன்றி ஆணும் பெண்ணும் காதல் கொள்வது உயர்வானது. ஒரு காரணம் பற்றி  அவன் அழகானவன் அதனால் காதல் கொண்டேன் என்றால் அது உண்மையான காதல் இல்லை.

ஆடவர் தங்களுடைய கவர்ச்சியைக் காட்டிப் பெண்களை ஈர்க்க முயல்பவர்களும் உண்டு. குறிப்பாக இளைஞர்கள் இளைஞிகளை ஈர்ப்பதற்கு அழகிய தோற்றம் கொண்டு ஈர்ப்பது. மேலும் சண்டியர் போலக் காட்டி ஈர்ப்பவர்களே அதிகம் ஓடும் பேருந்தில் ஏறி இறங்குவது ; ஓடும் தொடர்வண்டியில் வித்தைக்களைக்காட்டுவது போன்ற இழிவான செயல்களில் ஈடுபடுவது.  இவை போன்று திரையில் நடிகர்கள் செய்யும் ஆரவார சண்டைக் காட்சிகள் பெண்களைக் கவர்வதற்கு ஓர் உத்தியாக் கடைப்பிடித்து வென்றவர்களும் உண்டு.

 உண்மையில் ஆடவரின்  உடல் அழகையே பெண்டிர் பெருதும் விரும்புவர். சல்லிக் கட்டு என்னும் ஏறுதழுவல் போட்டியில் காளையை அடக்கி வென்றவனுக்குத் தன் மகளைத் திருமனம் செய்துவைக்கும் காலம் ஒன்று இருந்தது. காலப்போக்கில் செல்வச் செழிப்பு, படிப்பு, பதவி, இன்னபிறவும்  ஆடவரின் திருமணத் தகுதிக்குரியனவாகப் பெற்றோர் முடிவு செய்தனர்.

பெண்டிரும் தன் கணவன் ஆண்மையுள்ளவனாக உடல் வலிமை கொண்டவனாக இருக்க வேண்டும் என்பதையே பெரிதும் விரும்புவர்.

ஆண் வயதைக் குறைத்துக் காட்ட முகச் சவரம் செய்து கொள்வது. நடனம் கூட வலுவான உடல் அழகை, அசைவைக் காட்டும்  இவையும் ஒரு பாலினக் குறியீடு. இசை, நடனம் நாட்டிற்கு நாடு வேறுபடலாம் ஆயினும் குறிக்கோள் ஒன்றுதான்; பாலுணர்வு பாற்பட்டது.

Pl. donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

வெள்ளி, 25 ஜூலை, 2025

தமிழமுது –.81 . தமிழர் - அறநெறி வாழ்வியல். காமக் களிப்பு- பேரின்பம்: பெண்டிர்.

 

தமிழமுது –.81 . தமிழர் - அறநெறி வாழ்வியல்.

காமக் களிப்பு- பேரின்பம்: பெண்டிர்.

 

காதலன் செய் த கலக்குறு நோய்க்கு ஏதிலார்

எல்லாரும் தேற்றார் மருந்து.”- கலித்தொகை.

 நிலவே…..!மனக் கலக்கத்தைத் தருகின்ற காதலன் செய்த காமநோய்க்கு உன்னைத்தவிர அயலில் உள்ளார் எவரும் அதற்கொரு மருந்தைத் தெளிவாகக் கூறார்.என்றாள் தலைவி.

 

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு. குறள் ;1251.

நற்குணங்களாகிய நிறை என்னும் கதவினை, நாணம் என்னும் தாழ்ப்பாள் இறுக்கியுள்ளபோதும் காமம் என்னும்  கோடரி அதனை உடைத்தெறியும்.

 

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றி

தும்மல்போல் தோன்றி விடும்; குறள். 1253.

காம வேட்கையை என்னுள் மறைத்துக் கொள்ள விரும்பினேன், ஆயினும் முன்னறிவிப்பு ஏதுமின்றித் தும்மலைப்போல் அடக்கவியலாது வெலிப்பட்டு விடுகின்றது.

பதிவிரதையான துரோபதை பெண்களின் மனநிலைய கூறுவாளாக;;;

ஐம்புலன்களும் போல் ஐவரும் பதிகள்

     ஆகவும் இன்னம் வேறு ஒருவன்

எம்பெருங் கொழுநன் ஆவதற்கு உருகும்

     இறைவனே எனது பேர் இதயம்

அம்புவி தனில் பெண் பிறந்தவர் எவர்க்கும்

     ஆடவர் இலாமையின் அல்லால்

நம்புதற்கு உளதோ என்றனன் வசிட்டன்

     நல்லற மனைவியே அனையள்.” பாரதம்.,

இவளையே ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி என்று தமிழ் மக்களிடையே ஒரு பழமொழி வழங்கி வருவதைக் காணலாம்.

 பெண்ணின்பம் பேரின்பம் :

கண்களால் நேரேநாம் கண்டு களித்து

      உவக்கின்ற காட்சி இன்பம்

பெண்கள் பால் நுகர்கின்ற பேரின்பம்

    இவையன்றிப் பிறிது வேறே

எண்களால் உண்டென்று மருண்டு எண்ணும்

     மறுமை முத்தி என்ப எல்லாம்

மண்கள்பால் அறியாத மானுடர்தம்

     மருளான மடமை யாமே.”- சார்வாகம்.-

என்று உலகாயதக் கொள்கையர் பாடிய பாடல் கருத்தினை உற்று நோக்கின்  பேரின்பத்தின் பெருமையினை  விளங்கிக் கொள்ளலாகும்.

Pl. donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

வியாழன், 24 ஜூலை, 2025

தமிழமுது –.80 . தமிழர் - அறநெறி வாழ்வியல். காமக் களிப்பு- பேரின்பம்: பெண்டிர்.

 

தமிழமுது –.80 . தமிழர் - அறநெறி வாழ்வியல்.

காமக் களிப்பு- பேரின்பம்: பெண்டிர்.

 

காமம் தாங்குமதி என்போர் தாம் அஃது

அறியார் கொல்லோ அனை மதுகையர்கொல்.” –குறுந்தொகை.

தோழி….! காம நோயைத் தாங்கிக்கொள் என்று அறிவுரை கூறுகின்றவர்கள், தாம் அக்காமத்தின் தன்மையை அறியவில்லை போலும் அவர்கள் மன வலிமை உடையவர்கள் என்று கூறினாள் தலைவி.

 

சிறு கோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள்

உயிர்தவச் சிறிது காம்மோ பெரிதே.” – குறுந்தொகை.

பலாமரத்தின் சிறிய கிளையில் பெரிய பழம் தொங்குவதைப்போல், இவள் உயிரோ மிகச் சிறியது; காமமோ மிகப்பெரிது.

 

தெண் நீர் மலரின் தொலைந்த

கண்ணே காமம் கரப்பு அரியவ்வே.” –நற்றிணை;23.

தெளிந்த நீரில் உள்ள மலர் போன்ற இவள் கண்கள் அழகு இழந்தன ; அவை காமத்தை மறைக்க இயலாது தவிக்கின்றன .என்றாள் தோழி.

”படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்

காமநோய் செய்தஎன் கண்.  “ –குறள்: 1175.

கடலே சிறிதெனச் சொல்லும்படியான பெரியதாய காமநோயை எனக்குத் தந்த கண்கள் இன்று துயிலாது துன்பத்தில் உழல்கின்றன.

 

  அஃறிணை- காமக் கலவி.

” பாலும் நீரும் பாற்படப் பிரித்தல்

அன்னத் தியல்பென அறிந்தனர் கொள்ளே”.- இளம்பூரணர்.

 

அன்றில், புறா, அன்னம் என்னும் இம்மூவகைப் பறவைகளும் காமக் கலவியில் நேம நியமங்களுடையன. முன்னைய இரண்டும் நிலத்தில் மாத்திரம் வாழ்வன. அன்னம் நீரிலும் நிலத்திலும் சீர்மையாய் வாழும் நீர்மையது. தனது சேவலிடம் ஆவல் மிகவுடையது. கலவியால் அலகில் இன்பம் தருவது. அன்பு மிக அமைந்தது. அதிசய நீர்மைகள் இயல்பாய் இனிது வாய்ந்தது.”

 

அன்னத்து அன்ன மென்னடை அன்னத்துப்

புணர்வின் அன்ன தண்டாக் காதல் “ –பெருங்கதை.

Pl. donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

புதன், 23 ஜூலை, 2025

தமிழமுது –.79 . தமிழர் - அறநெறி வாழ்வியல். காமக் களிப்பு- பேரின்பம்:ஆடவர்.

 

தமிழமுது –.79 . தமிழர் - அறநெறி வாழ்வியல்.

காமக் களிப்பு- பேரின்பம்:ஆடவர்.

மன்மத லீலை வென்றார் உண்டோ…?

காமம்பருவ விளைவின் விழைவே. சங்கப்புலவர்கள் காமவிழைவை நோய் என்று கூறுவர். இப்பாலியல் வேட்கை உடலையும் உள்ளத்தையும் ஒருங்கே நின்று வருத்துவதால் அதனை நோய் என்றனர்.

ஆடவர், பெண்டிர் அறவழி நிற்றல் வேண்டும்;

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

 அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.” –குறள்: 148.

ஆடவர் கற்புடன் வாழ்தல் வலியுறுத்தி வள்ளுவர் கூறினார்.

பிறன் மனையாளைக் கண் எடுத்தும் பார்க்காத  ஒழுக்கம் உடையவன் சான்றோனாகும் தகுதி மட்டுமன்று அஃது அறமுமாகும்.

சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை.-குறள்:57.

பருவமுற்ற மகளிரைக் கற்பொழுக்கம் கெடாது  கண்ணுக்குள் வைத்துக் காக்கும் காவல் என்ன பயனைத் தரும் ; மகளிர் பருவப் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்தித்  தம்மைத் தாமே

 காத்துக்கொள்ளும் காப்பே சிறப்புடையதாம்.

காமக் களிப்பு- பேரின்பம்: ஆடவர்.

 

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள. –குறள். 1101.

கண்ணால் கண்டும் காதால் கேட்டும் நாவால் சுவைத்தும் மூக்கால் நுகர்ந்தும் உடலால் தழுவியும் துய்க்கப்பெறும் ஐம்புல  இன்பங்கள் யாவும்  ஒளி பொருந்திய வளையல் அணிந்த இப்பெண்ணிடத்தே  இருக்கின்றன. அஃதாவது  ஐம்புலன்களும் ஓரிடத்தில்  ஒரே நேரத்தில் ஒருசேர துய்க்கப்பெறும் காமக் களிப்பைக் குறித்தார்.

 

வேட்ட பொழுதின் அவையவை போலுமே

தோட்டார் கதுப்பினாள் தோள்.” –குறள். 1105.

 மலர் மணம் கமழும் அழகிய கூந்தலை இவளின் தோள்கள், விட்டகல நினையாத வேட்கையால் விழையும் விழையும் பொருள்களைப் போல, விருப்புடன் புணருந்தோறும் இன்பம் அளிக்கின்றனவே.

 

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு,” குறள். 1110.

சான்றோர் நூல்களக் கற்குந்தோறும் அறியாத புதிய செய்திகளை அறிந்துகொள்வதைப்போல, அழகிய அணிகலன்கள் பொலிவு பெற அணிந்த இவளைப் புணருந்தோறும் காம இன்பம் முன்னினும் சிறந்து புதுமையாகத் தோன்றுகிறதே…!.

 

இன்பத்துள் சிறந்த இன்பம்:

வார்முலை முற்றத்து நூலிடை விலங்கினும்

கவ்வுப் புலந்துறையும் கழிபெருங் காமத்து

இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்.” – அகநானூறு.

 நெஞ்சே….!  தலைவியின் மார்பில் தோய்ந்து முயங்கும் முயக்கத்தினை ஒரு நூல் இடையே தடுப்பினும் அதனை வெறுத்து, மிகுந்த காதலோடு இன்பம் துய்க்கும் நுகர்ச்சியைக் காட்டிலும் சிறந்தது ஒன்று இல்லை. –என்றான் தலைவன்.

மன்மத லீலை வென்றார் உண்டோ…?

 

 

காமக் களிப்பு- பேரின்பம்: பெண்டிர்.

 

Pl. donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

செவ்வாய், 22 ஜூலை, 2025

தமிழமுது –.78 . தமிழர் - அறநெறி வாழ்வியல். காதல் - காமம்- கண்கள் வெளிப்படுத்தும் அறிகுறிகள்.

 

தமிழமுது –.78 . தமிழர் - அறநெறி வாழ்வியல்.

காதல் - காமம்- கண்கள் வெளிப்படுத்தும் அறிகுறிகள்.


 காமம் சொல்லா நாட்டம் இன்மையின்

ஏமுற இரண்டும் உளவென மொழிப.-தொல்காப்பியம்.

காதல் உணர்வை வெளிப்படுத்தாத கண்கள் இல்லாததால், பெருமை பொருந்திய நாணமும் மடனும் ஆகிய இரண்டும் உள்ளன என்று கூறுவர்.

 

காதல் கண்கள்வழியே வெளிப்படும்:

நோக்கு எனும் சொல்லேகாதல் பார்வைஆகும்.

“காலே பரிதப்பினவே கண்ணே

நோக்கி நோக்கி வாளிழந்தனவே”

காதலன் வரவை எதிர்நோக்கி கண்கள்  ஒளி இழந்த்தது.

  (குறுந்தொகை)

 சிலம்பில் இளங்கோவடிகள்,

“செங்கண் ஆயிரம் திருக்குறிப்பருளவும்

கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து.”

எனக் கண்கள் ஆயிரம் குறிப்புகள் காட்டும் ஆற்றல் வாய்ந்தவை என்பதை ஆடற்கலையில் வைத்துக்காட்டுகின்றார்.

 

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலர் கண்ணே உள. –குறள்:1099.

அயலார் போல் நின்று  பொது நோக்கு நோக்குதல் மனத்தில் காதல் கொண்டவரிடம் உள்ள ஓர் இயல்பாகும்.

 

கண்ணும் கண்ணும் பரிமாறும் காதல் உணர்வுகளைத் திருவள்ளுவர் , தகையணங் குறுத்தல், குறிப்பறிதல், நலம்புனைந்துரைத்தல், காதல் சிறப்புரைத்தல், அலரறிவுறுத்தல், பிரிவாற்றாமை, படர் மெலிந்திரங்கல்,  கண்விதுப்பழிதல் ஆகிய அதிகாரங்களுள் மிக விரிவாக எடுத்துரைக்கின்றார்.

 

“ எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழி

கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று

உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள.” –கம்பன் காவியம்.

பழைய திரைப்படப் பாடல்கள்:

கண்ணில் தோன்றும் காட்சியாவும் கண்ணே உனது காட்சியே

மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே.”

 

“காளைக் கன்றுபோல் உருவம் கொண்ட ஆள் ஒருவன்

நின்று போட்ட ஒரு பார்வையிலே – என்னைக்

கொன்று விட்டானடி மாமயிலே.” என்று ஆடவர் காதல் பார்வையின் ஆற்றலைக் குறித்துள்ளார் கவிஞர்.

‘பம்பரக் கண்ணாலே காதல்

சங்கதி சொன்னாளே

தங்கச் சிலைபோல் வந்து

மனதைத் தவிக்க விட்டாளே.”

 

“தென்றல் உறங்கிய போதும்

திங்கள் உறங்கிய போதும்

கண்கள் உறங்கிடுமா காதல்

கண்கள் உறங்கிடுமா..?”

 

 பார்வையிலே நோய் கொடுத்தாய்

கன்னியிளமானே

பக்கம் வந்து தீர்த்து வைப்பாய்

கன்னியிளமானே.”

 என்றவாறு கண்கள் காதல் உணர்வை வெளிப்படுத்தும் அழகைக் காணலாம்.

 

Pl. donate:

R.KUMARAN,Thanjavur.

Account No: 0914101167707

IFSC CODE : CNRB 0001854

MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

 

சனி, 19 ஜூலை, 2025

தமிழமுது –.77 . தமிழர் இயற்கை வழிபாடு. காதல் – காமம் . அறநெறி வாழ்வியல்.

 

தமிழமுது –.77 . தமிழர் அறநெறி வாழ்வியல்.

காதல்காமம்

காதல் – அறவழி நிற்றல் :

 தொல்காப்பியர் காதல் களவொழுக்கமாகும் என்கிறார்.

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் எனும் நூற்பாவில்

இன்பமும் பொருளும் அறமும் என்று சொல்லப்பெற்ற அன்போடு இணைந்த ஐந்து ஒழுக்கங்களைக் கூறும்போது, காமக்கூட்டம் என்பது தமிழ்மறையோர் தமிழகத்துக் கூறப்பெற்ற எட்டுவகை மணத்துள், இசைத் துறையைச் சார்ந்த யாழ்த்துணையோர் இயல்பே. ஆகும்.

 அதற்குரிய காரணமாவது:

“ஒன்றே வேறே என்றிரு பால்வயின்

ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப

மிக்கோன் ஆயினும் கடிவரை யின்றே.” என்றது

ஒன்றுபடுத்தும் ஊழ்நிலையானும் வேறுபடுத்தும் ஊழ்நிலையானும் அமையும் வாழ்க்கையில் ஒன்றுதலைச் செய்யும் உயர்ந்த ஊழின் ஆணையால், ஒத்த தலைவனும் தலைவியும் காண்பர். தலைவன்  மிக்கோன் ஆனாலும் நீக்கப்படல் இல்லை என்பதாம்.

காதல் வயப்பட்ட இருவரும் ஊரும் உறவும் அறியாவண்ணம் தனிமையில் மகிழ்ந்திருத்தல் நிகழ்வது இயல்பே. எனினும்  இந்நிலை இரண்டு திங்கள் அளவே நீடிக்கும் அக்கால எல்லைக்குள் உடன்போக்கு எனப்படும்  வீட்டை விட்டு வெளியேறி மணம்புரிந்து கொள்வர். இந்நிகழ்வு அறவழிப்பாட்ட தாகும் என்று சான்றோர் இலக்கணை இலக்கியங்கள் கூறுகின்றன.

சான்றாக  ஒன்றைக் காண்போம்.

“ இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்

சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்

அறம் தலைப்பிரியா ஆறும் மற்றதுவே. –கலித்தொகை. 9.

 தாயே….! விரும்பிய காதலனோடு சென்ற கற்பிற் சிறந்தவளை எண்ணிக் கலக்கம் அடையாதே…! சிறந்தவைனைத் தேர்ந்து அவன் பின்னே சென்றாள் ; அறங்களுள் சிறந்த இல்லறத்திற்குரிய வழியும் அதுவே என்று  உடன்போக்குச் சென்ற இருவரையும் வழியில் கண்ட பெருமக்கள் தலைவியின் தாயிடத்துக் கூறுவதாக இப்படல் அமைந்துள்ளதை நோக்குக.

காதல்  அறவழிப்பட்டுச் சிறப்புற்றதைத் தமிழ் மக்கள் போற்றியுள்ளனர் என்பது தெளிவாகின்றதே! மேலும் இக்காதல்  மணம் புரிந்துகொண்டு இல்லற வாழ்விற்குத் தகுதியுடையதாகையால்  இக்களவு மணம் கற்பில் நிறைவடைகிறது  என்பதையும் அறிதல் நன்று

காமமும் அறவழி நிற்றல்:

Pl. donate:

R.KUMARAN,Thanjavur.

Account No: 0914101167707

IFSC CODE : CNRB 0001854

MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

 

வெள்ளி, 18 ஜூலை, 2025

தமிழமுது –.76 . தமிழர் இயற்கை வழிபாடு. காதல் – காமம் . அறநெறி வாழ்வியல்.

 

தமிழமுது –.76 . தமிழர் இயற்கை வழிபாடு.

காதல்காமம் . அறநெறி வாழ்வியல்.

தமிழரின் வாழ்வியல் நெறியென வகுத்துக்கூறியதாவது அறம், பொருள், இன்பம் என மூன்றுமேயாம். வீடுபேறு என்பது தமிழர் நெறியன்று.

 

“ அறம்பொரு ளின்பம் உயிரச்சம் நான்கின்

திறந்தெரிந்து தேறப் படும்.” குறள். 501.

“ அறம், பொருள், இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து  ஒருவனைத் தெளிய வேண்டும் என்பது குறளின் கருத்தாகும்.

 

 அறம் பிறழாமலும் பொருளுக்காகக் கடமையில் தவறாமலும் இன்பத்தின் பொருட்டு ஒழுக்கம் தவறாமலும் உயிர்க்கு உண்டாகும் கேட்டுக்கு அஞ்சிக் கடமை தவறாமலும் உள்ளவனையே  தேர்ந்தெடுக்க வேண்டும்..

  அறம் பொருள் இன்பம் அடைதல் நூற்பயன் ‘ என்பதையே வடமொழிக்கு அடிமையான  பிற்காலத் தமிழர்கள்  ‘அறம் பொருள், இன்பம்  வீடு அடைதல் நூற்பயன் என்று திரித்துவிட்டனர். வீடும் உறுதிப் பொருளில் ஒன்று என்பது பழந்தமிழர் கொள்கை எனில் வள்ளுவர் திருக்குறளை நாற்பாலாகச் செய்யாமல்  முப்பாலாகச் செய்திருப்பாரா..?”

 

“ வள்ளுவர் ஓர் அறிவு நூற் புலவர், அரசியலறிஞர்  வாழ்வியல் கணக்கர், தமிழர் பண்பாட்டின் பெருமையை நன்குணர்ந்தவர்  தமிழினப் பற்றுடையவர்.   தமிழர் நாகரிகத்திற்கும் ஆரியர் நாகரிகத்திற்கும் உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்தவர். ஆகையால், அவ்வடபுல மக்களின் பொய் கூற்றுக்களும், போலிக் கொள்கைகளும் தமிழ் மக்களிடையே பரவி வருவதைத் தடுத்து, விலக்கி, மேலும் அவை பரவாமலிருக்க தமிழ் மக்களின் பழக்கவழக்கங்களாகிய ஒழுக்க முறைகளை, அகம், புறப் பாகுபாட்டைத் தழுவி அறம், பொருள், இன்பம் என முப்பாலாக்கி ஒரு நூல் செய்து தமிழர் பண்பாட்டை நிலைநிறுத்த எண்ணினார்.

 

வீடு பேறு என்பதும், வீடு என்பதும் அது ‘சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து’ என்பதும் கற்பனைப் பேச்சாகும். திருக்குறளுக்கும்  வீட்டுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை. வினை, பிறப்பு, வீடு, இந்திரன் முதலிய இறையவர் பதங்களை அடைதல், நரகத்தை அடைதல், பிறப்பறுத்தல் வீடு பெறுதல் என்பனவெல்லாம்  ஒன்றுக்கொன்று முரணான விளங்காப் பேச்சுகளேயன்றிப் பயனுடைய பேச்சல்ல. குறளுக்கும் இப்பேச்சுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை.” –புலவர். குழந்தை.

 

 அறவழி:

 சங்கப் புலவர்களும் அறநெறி வாழ்வியலைப் போற்றினர்.

“ சிறப்புடை மரபும் பொருளும் இன்பமும்

அறத்துவழி வழிப்படூஉம் தோற்றம்…” –புறநானூறு. 31.

சிறப்பினை உடைய பொருளும் இன்பமும் அறவழிப்பட்டுச் சிறப்புறும். இதுவே வள்ளுவர் வாய்மொழி என்பதையும் அறிக.

” அறம் எனப்படுவது யாது எனக் கேட்பின்

மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்

உண்டியும்  உடையும் உறையுளும் அல்லது

கண்டதுஇல்… “ என்கிறது. மணிமேகலை.

 வாழும் உயிர்களுக்கெல்லாம் உணவும் உடையும் இடமும் அளிப்பதன்றி அறம் என வேறு எதனையும் சான்றோர் கண்டதில்லை.

Pl. donate:

R.KUMARAN,Thanjavur.

Account No: 0914101167707

IFSC CODE : CNRB 0001854

MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

புதன், 16 ஜூலை, 2025

தமிழமுது –.75 . தமிழர் இயற்கை வழிபாடு. காதல் – காமம் . அறநெறி வாழ்வியல்.

 

தமிழமுது –.75 . தமிழர் இயற்கை வழிபாடு.

காதல் – காமம் . அறநெறி வாழ்வியல்.

 தமிழர் வாழ்வியலில்  தொல்காப்பியர் வழிநின்று அறியலாம்.

“ வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று

ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே.”

 யாவர்க்கும் தெரிந்து மணந்து கொள்ளுதல் ;  யாருக்கும் தெரியாது (களவு மணம்) மணந்து கொள்ளுதல் எனத் திருமணமுறை இரு வகைப்படும் என்பார். இவ்விருவகைத் திருமணமுறை இன்றளவும் தமிழ்ச் சமுதாயத்தில் நின்று நிலவுவதை நாம் அறிவோம்.

களவு கற்பு எனக் கண்ணிய ஈண்டையோர்

உளம் நிகழ் அன்பின் உயர்ச்சி மேன” என்கிறது இறையனார் களவியல்.

களவு என்றும் கற்பு என்றும் புலவர்களால் வகுத்துரைக்கப்பட்ட ஒழுக்கங்கள் இவ்வுலகத்தில் பிறந்தோர்தம் (தலைவன், தலைவி) உள்ளத்தின்கண் நிகழ்கின்ற  அன்பினது உயர்வின் அளவைப் பொறுத்தே அமையும்.

களவு மணமும் கற்பில் நிறைவுறும் என்பர்.அஃதாவது ஒருவனுக்கு ஒருத்தி எனும் அறவழி வாழும் வாழ்க்கையைச் சுட்டும். காதல் என்பது உயிர் இயற்கை.

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தான் அமர்ந்துவரூஉம் மேவற்றாகும். – தொல்காப்பியம்.

 இன்ப விழைவு என்பது உலக உயிர்கள் அனைத்திற்கும் மனம் பொருந்தி வரும் விருப்பமுடைமை ஆகும்.

 அத்தகைய இன்ப விழைவே காமம் ; பருவத்தில் விளையும் பாலியல் எழுச்சியே காமமாகும். இஃது ஓர் இயற்கை நிகழ்வே எனினும் அதற்கான ஒழுக்கங்களைச் சான்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

 

.………………………தொடரும் ------------------------------

செவ்வாய், 15 ஜூலை, 2025

தமிழமுது –.74 . தமிழர் இயற்கை வழிபாடு. ஆன்மா, அழிவதில்லை….? பேரின்பம் – சிற்றின்பம்

 

தமிழமுது –.74 . தமிழர் இயற்கை வழிபாடு.

ஆன்மா, அழிவதில்லை….? பேரின்பம் சிற்றின்பம்

 

இல்லறம்துறவறம்.:

இல்லற நெறிநில்லாதுஇளமை முதற்கொண்டேஇறைநெறி ஏற்று, வீடு பேறு  எனும் பேரின்பம்அடைதல் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு வாழ்வோர் துறவறம் கொள்வர். துறவறம் தமிழர் வழக்கன்று. அஃது இயற்கைக்கு எதிரான செயலாகும் என்பதைத் தமிழர்கள் நன்கு உணர்ந்ததனால் “அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்  பழிப்பது இல்லாயின் நன்றே”  எனும் வள்ளுவர் வகுத்த வாழ்வியல் நெறி இயற்கையோடியைந்த வாழ்தலைப் போற்றினர்.அதனால் பருவத்தில் இயல்பாய் விளையும் காதலும் காமமும்  வாழ்வியல் நெறியாயின. அஃதே பேரின்பம் என்றும் கண்டனர்.

 

 இல்லறம் - காதல் :

 “ யாயும் ஞாயும் யார் ஆகியர்ரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.” –குறுந்தொகை.

அவனும் அவளும் ஒருவருக்கொருவர் நேரில் கண்டு மகிழ்ந்த நிலையில்  இருவர் உள்ளமும்  செம்மண்ணில் பெய்த மழைநீர் தன்னை இழந்து மண் நிறத்தோடு இரண்டறக் கலந்தது போல்  இருவரும் காதல் வயப்பட்டனர். இஃது ஓர் இயற்கை நிகழ்வே ; பருவத்தில் முகிழ்க்கும் உணர்வே.

 

 ”காதல் தானும் கடலினும் பெரிதே” நற்றிணை.

காதல் –தலைவன் கூற்று:

“அன்பும் மடனும் சாயலும் இயல்பும்

என்பும் நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்

ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி

 இன்றே இவணம் ஆகி….” –அகநானூறு.

நெஞ்சே…! தலைவியின் அன்பும் மடனும் மென்மையும் ஒழுக்கமும் உயிரை மகிழ்விக்கும் இனிய சொல்லும் ஒன்றுபட்டுள்ள கொள்கையும் பிறவும் ஒரே தன்மை உடையதாய் என்றும் இருக்க, இன்று இவ்விடத்தே இருந்து மகிழ்ந்தோம்.

காதல் உள்ளம் –தலைவி கூற்று:

 

‘யாத்தேம் யாத்தன்று நட்பே

அவிழ்த்தற்கு அரிது அது முடிந்து அமைந்தன்றே.” –குறுந்தொகை.

 தலைவனோடு யாம் காதல் உறவினால் பிணிக்கப்பட்டுவிட்டோம்

அந்நட்பை இனி எவராலும் பிரிக்க முடியாது. இந்நட்பு பிறவிகள்தோறும் தொடருமாறு முன்பே முடிக்கப்பட்டு அமைந்ததாகும்.

.………………………தொடரும் ------------------------------