செவ்வாய், 8 ஜூலை, 2025

தமிழமுது –.68 . தமிழர் இயற்கை வழிபாடு. ஆசிவகம் :

 

தமிழமுது –.68 . தமிழர் இயற்கை வழிபாடு.

ஆசிவகம் :

கி.மு. 6 இறுதியில் இந்தியச் சிந்தனை மரபில் வேத, வைதிக எதிர்ப்பு நிலவியது.புத்தர், மகாவீரர், பக்குடுகை நண்கணியார், பூரணர், நரிவெரூத்தலையார் முதலியோர் தோற்றிய ஒரு புதிய கோட்பாடு ஊழியியல்ஆசிவகம் = வாழ்க்கை முறை.  கணிநந்தவாசான், பூதப் பாண்டியன்நண்பன், - ஆசிவகத்தைச் சார்ந்தவன் என்பர். பூதப்பாண்டியன் இவரை  ‘ வெஞ்சின இயக்கன்’ எனக் குறிப்பார். சங்க காலத் தமிழில் நல்வெள்ளையார், இவரைப் பாலிமொழி ‘பரமச்சுக்க நிலை’ என்கும். இவர் படைத்தலைவர், ஆசிவகர் இவருக்காக எடுக்கப்படுவதுதான் குதிரை எடுப்பு (புரவி எடுப்பு) நிகழ்கிறது.

 

ஐயனாரின் மூன்று நிலைகள் – போர்க்கோலம், பூரணம் பொற்கலை (இரு மனைவியருடன்) மணமாகாத ஐயனார் ஆகியனவாகும். பூரணர், மற்கலி, கணிநந்தவாசான் இம்மூன்று அறிஞர்களும்  ஐயனார்களாகப் போற்றப்படுகின்றனர்.

சித்தன்ன வாசல் ஓவியம் ஐயனார் வரலாற்றின் மூல ஊற்று என்றும் அவ்வோவியங்கள் சமணர்க்கு உரியவையல்ல என்பர்.

ஐயனார் – சாத்தன் – குதிரை வாகனன். ஐயனார்  ஆசிவகத்தில் துறவி எனப் போற்றப்டுகின்றார், அறிவு, வளமை, வீரம்  என மூன்றின் கூறுகளாக்க் கொண்டு வழிபடுவர்.

சாத்தானாகிய ஐயனார் 96 வகையான தருக்க சாத்திரங்களில் வல்லவர் என்பர்.

ஆசிவகர் உணவு – கஞ்சி

ஐயனார் படையல் – பொங்கல்.

 ஐயனார் சிலையைத் துணியால் மூடிவிட்டு,  கடா வெட்டு நடைபெறும். இந்நடைமுறை கருப்புகளுக்கு உரியது (பெரியண்ண சாமி, ஒண்டிக்கருப்பு, பாலடிக் கருப்பு).

.………………………தொடரும் ------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக