புதன், 9 ஜூலை, 2025

தமிழமுது –.69 . தமிழர் இயற்கை வழிபாடு. ஆசிவகம் :2.

 

தமிழமுது –.69 . தமிழர் இயற்கை வழிபாடு.

ஆசிவகம் :2.

வெற்றி வீரர்களைப் பாராட்டிக் கடா வெட்டிப் புலவு உணவு உண்பதை பெருஞ்சோறு என்று போற்றுவர். இதனைச் சங்க இலக்கியம் “பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை” எனக் குறிப்பிடும். தமிழர்கள் மாவீரர் நாளை பெருஞ்சோற்று நிலயாகக் கொண்டாடினர். சேரமன்னன்  உதயன் சேரலாதன்,

“மறப்படைக் குதிரை மாறா மைந்தின்

முதியர்ப் பேணிய உதயஞ்சேரல்

பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை” – என்று அகநானூறு மாமூலனார் பாடல் சுட்டுகிறது.

தமிழர் ஊருக்குப் புறத்தே நடத்தினர் இதற்குக் “கொடைக்கடன்”  என்று பெயர். 

போர்க்களத்தில் உயிர்நீத்தார்க்கு, “ கொடைக்கடன் ஏற்ற கோடா நெஞ்சின் ; உதியன் அட்டில் போல…” என்று அகநானூறு கூறும்.  

பெருஞ்சோற்று நிலையையே – ஐயனார் கோவிலில் கடா வெட்டுதல் ; வீரர்களுக்கு நடுகல் எடுப்பது ;  ஆகியவற்றைச்

 சீர்த்தகு மரபு என்பர்.  

அமரர்ப் பேணுதல் என்பதாவது, வீரர்களுக்குரிய உரிய கடன். இந்தக் கடன் தடுக்கப்பட்டதால் ஒரு பேரரசே சிதைந்தது என்பதைக் காட்டுவதே “ஆண்டிகனான்” என்னும் கிரேக்க நாடகம் ’சோபக்கிளிசு’ எழுதியது.

போரில் வீரமரணம் எய்தவனின் வாளைக் கவிழ்த்து வழிபடுவதே “ ”வாள் வாய்த்துக் கவிழ்ப்பு” ஆகும்.

ஐயனார் கோவில்களில் சார்த்தப்பட்டிருக்கும் பெரிய பெரிய வாள்கள் எல்லாம் வாள் வாய்ப்புச்  சடங்கின் குறியீடுகள்.

 தமிழர் பண்பாடு – பெருஞ்சோற்று நிலயின் அடையாளமே. ஆடு,கோழி வெட்டல்.

 பசுக்களை வெட்டியும்  குதிரைகளை வெட்டியும் அதுவும் ஆயிரக்கணக்கில் வெட்டி வீழ்த்தி யாகம் என்ற பெயரில் கொன்று குவித்த வைதிகத்தைக் கண்டித்து வளர்ந்த பெளத்த , ஆசிவக சமயங்களின் செல்வாக்கின் காரணமாகவே  வைதிகம் தன் யாகப் பண்பாட்டை மாற்றிக் கொண்டது. யாகங்களுக்குத் தடை விதித்ததால் அசோகனின் மெளரிய மரபு அழிக்கப்பட்டுப் பார்ப்பனிய சடங்குகளுக்கு மறுவாழ்வு தந்த புசியமித்திரனின் சுங்க மரபு தோன்றியது, பெளத்தர்களைக் கொன்று குவித்தனர்.

.………………………தொடரும் ------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக