செவ்வாய், 16 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி -31 - 33

 அகநானூறு – அரிய செய்தி -31

                                                                     ஒடுமரம்
நெடுங்கால் ஆசினி ஒடுங்காட்டும்பர்
              மாமூலனார், அகநா.91: 12
நீண்ட அடியை உடைய ஈரப்பலா மரங்களை உடைய ஒடுங்காடுஎன்னும் ஊருக்கு அப்பால்.
 பாசி தின்ற பைங்கண் யானை - யானை பாசியைத் தின்றமை நீர்ப்பசை கருதி என்க. கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த – மழவர்கள் களவாகிய உழவிற்கு எழும் இடமாகிய.களவு = உழவு. ஒடு- ஒருவகை மரம்
நியமம் என்னும் ஊரினைக் கொடுப்பினும் அமையும் எனக் கொள்வார் அல்லர். –நெய்தல்.

அகநானூறு – அரிய செய்தி -32

                                                                வெறியாடு களம்
கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப்
பொய்வல் பெண்டிர் பிரப்புளர் பிரீஇ
முருகன் ஆரணங்கு என்றலின் அது செத்து……..
          வெறிபாடிய காமக்கண்ணியார், அகநா. 98:  8-11
தாயானவள் தலைவியின் நோய் நீக்க, முதுமை வாய்ந்த பொய் கூறல் வல்ல கட்டுவிச்சியராய பெண்டிர், பிரப்பரிசியைப் பரப்பி வைத்து இது முருகனது செயலான் வந்த அரிய வருத்தம் என்று கூறலின் அதனை வாய்மையாகக் கருதி….
தெய்வம்-பூசனை99
பராஅம் அணங்கு உடை நகரின் மணந்த பூவின்பரவக்கடன் பூண்ட தெய்வமுடைய கோவிலின்கண் கலந்து கிடக்கும் பூக்களைப் போல. புனலிப்பூ மோசி மல்லிகைப் பூ.


அகநானூறு – அரிய செய்தி -33

                                                   புற்றுமண் தின்னல்
கவன் மாய் பித்தைச் செங்கண் மழவர்
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்
தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி
              மாமூலனார், அகநா.101: 5-7
பிடரியை மறைக்கும் தலை மயிர்சிவந்த கண்கள்வாயில் எழும் இருமல் ஆகிய பகையைத் தீர்க்கும் புற்று மண்ணை வாயில் அடக்கிக் கொண்டனராய் கன்றினையுடைய ஆனின் கொள்ளையர்.வாய்ப்பகை- வாயினின்று உண்டாம் பகை ; இருமல்; அவரது வரவை வெளிப்படுத்தலின் பகை என்றார். கட்டாவது முறத்திலே நெல்லையிட்டுக் குறி சொல்லுதல்- பிரப்பு தினை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக