திங்கள், 1 ஜூன், 2015

கைந்நிலை – பொன்மொழிகள்

கைந்நிலை – பொன்மொழிகள்
 புல்லங்காடனார்

கானக நாடன் கலந்தான் இலன் என்று
மேனி சிதையும் பசந்து
                                                                                                       1 : 3, 4
தோழி! தலைவன் என்னோடு கலந்து மகிழ்ந்து இனிது இருந்தான்; இப்பொழுது  என்னைவிட்டுப் பிரிந்தான் என்பதை அறிந்து  என் உடல்  பசலை நிறமாகி அழகு அழிந்தது. – தலைவி                                                      

பரல் கானம் பல் பொருட்குச் சென்றார் வருவர
நுதற்கு இவர்ந்து ஏறும் ஒளி
                                                                                                    19 : 3, 4
தலைவி ! நினது நெற்றியில் பசலை நீங்கி ஒளிபடர்ந்து வருகின்றது ஆதலால், பருக்கைக் கற்களை உடைய காட்டு வழியில்,  மிகுந்த பொருள் ஈட்டச் சென்ற தலைவர் விரைந்து வருவார்; வருந்தாதே . - தோழி                                                          
                                                முற்றும்             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக