செவ்வாய், 3 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -10
ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைவன்
உய்யக் கொண்டேறுங் குதிரை மற்றொன்று உண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்குங் கொடாது போய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திருந் தானே.” –திருமந்திரம்.
ஐம்பொறிகளுக்குத் தலைவன் – ஆருயிர்
ஐவர் வாழும் ஊர் – ஐம்பொறிகள் ; உடல்
அவ்வூர்க்குத் தலைவன் – மனம்
குதிரை – உயிர்ப்பு (உயிர் வளி)
அகத் தவப் பயிற்சி உடையார்க்கு மனமாகிய குதிரை அடங்கிப் பற்றுக்கொடுத்து ஒழுகும்; முறையான பயிற்சி இல்லாத பொய்யர்க்குப் பற்றுக்கொடாது, துள்ளி எழுந்து அவரைக் கீழே வீழ்த்தித் தான் வேண்டியவாறு சென்றுவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக