திங்கள், 30 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -37

மெய்ப்பொருள் காண்பது அறிவு -37
ஆரியப் புரோகிதம் -1
“வடமொழி மறையே தமிழ் மறைகட்கு ஒப்பாகாத பொழுது, வடமொழியில் உள்ள சாமான்ய நூல்களின் உரைகள் கொண்டும், வடமொழிநூல் வழக்காறுமின்றி வடமொழியில் வழங்கும் வெற்றுரைகள் கொண்டும் ஆரியப் புரோகிதரால் செய்யப்பெறும் திருமணங்களில் நிலைமையை என்னென்று எடுத்தியம்புவது…! “ இந்த உண்மைகளை உண்ராத தமிழ் மக்களுக்கு-  அதினும் தமிழ்ப் பெண் மக்களுக்கு – தமிழ்த் தெய்வத்தின் திருவருள் அவர்கள் அனைவர் மனத்திலும் விரைவில் தமிழ் மெய்யுணர்ச்சி ததும்பி எழுமாறு செய்வதாக எனத் தமிழ்த் தெய்வத்தின் திருவடித் தாமரைகளை முப்போதும் முடிக்கணிந்து வழுத்தி வருவோமாக.”,, பண்டைத் தண்டமிழ் மக்களது ஒழுகலாற்றினைப் பழந்தமிழ் நூற்களின் வழி ஆராய்ந்துகாணினும் திருவருட் சிறப்பே முதலெனக் கொண்டு அவ்வழி நின்று ஆராய்ந்து காணினும் ‘ செந்தமிழ் மாமறை கொண்டு திருமணஞ் செய்தலே’ உலகின் அறத்தாற்றின் இல்வாழ்க்கைஆற்றப்புகும் மக்கட்கு இயல்பினால் இல்வாழ்க்கை வாழும் நெறி இஃதெனக் காட்டி, அனபும் அறனும் உடைய பெருவாழ்விலே திளைக்கச் செய்யும் பெருஞ் சிறப்பு உடையதாம் என்பது காணப்படுகின்றது,”
 “ தாயை நீக்கி ஒருவன் மணஞ்செய்து கொள்வானாயின் அவனை எங்ஙனம் உலகம் பழிக்குமோ அங்ஙனமே தாய்மொழியை நீக்கி, மணஞ் செய்து கொள்வோர்களைத் தமிழ்த் தெய்வமும் – தமிழ்ச் சான்றோர்களும் பழிப்பர் என்று தமிழர்கள் அறிதல் வேண்டும்.” – பேராசிரியர் கண்ணப்ப முதலியார். 

1 கருத்து: