திங்கள், 23 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :945


திருக்குறள் -சிறப்புரை :945
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. ---- ௯௪௫
(மறுத்து உண்ணின்)
உடலுக்கு ஒவ்வாத  உணவை மறுத்து,  அளவோடு உண்டு வந்தால் உடல் வலிவும் பொலிவும் பெற்று நோயில்லா வாழ்க்கை நிலையாகும்.
“இரு மருந்து விளைக்கும் நல்நாட்டுப் பொருநன்.”—புறநானூறு.
தண்ணீரும் உணவுமாகிய  இரு மருந்தை பசிப்பிணிக்குத்தரும் நல்ல நாட்டிற்குத் தலைவன் கிள்ளிவளவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக