வியாழன், 26 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :947

திருக்குறள் -சிறப்புரை :947
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும். --- ௯௪௭
(தீ அளவு அன்றி ;பெரிது உண்ணின் ; நோய் அளவு இன்றி)
வயிற்றின் செரிக்கும் அளவு அறிந்து உண்ணாது, அளவுகடந்து உண்டால் உடலில் நோயும் அளவின்றிப் பெருகும்.
“இரைசுடும் இன்புறா யாக்கையுள் பட்டால்
உரைசுடும் ஒண்மை இலாரை …” –நான்மணிக்கடிகை.
நோயுள்ள உடம்பில் சேரும் உணவு செரிக்காமல் துன்புறுத்தும் ; அறிவு இல்லாதவரை அவர்தம் வாய்மொழியே துன்புறுத்தும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக