ஞாயிறு, 22 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -29

மெய்ப்பொருள் காண்பது அறிவு -29
”கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே.” –தொல்காப்பியம்.
“பேசும் மொழி பதினெட்டும் வளரவேண்டுமானால், இந்தியா முழுமைக்கும் பாலர் வகுப்பு முதல் பட்டப்படிப்பு ஈறாக, முறையான ஒழுங்கான நெறியான பாடமுறை அமைய வேண்டும்.
ஒரு பல்கலைக் கழகத்துக்கும் மற்றொரு பல்கலைக்கழகத்துக்கும் உயர்வு, தரம், பாடமுறை வேறுபாடு இல்லாமல் இருத்தல் வேண்டும். அப்படி வித்தியாசம் இல்லாமல் இருந்தால் மாநிலத்துக்கு மாநிலம் வேற்றுமை வளராமல், தரம் குறையாமல் கல்வி வளரும்.”
“ பாலர் வகுப்பிலிருந்து பத்தாவதுவரை சீரான பாடங்களை வகுக்க வேண்டும். இந்தக்கல்வி தாய்மொழி மூலமே புகட்டப்பட வேண்டும். பொதுமொழியைக் குழந்தைகள் தவறாமல் கற்க வேண்டும்.”---- பூண்டி ஐயா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக