சனி, 14 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -21

மெய்ப்பொருள் காண்பது அறிவு -21
”முகத்தின் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தின் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனம்.” –திருமந்திரம்.
உங்கள் கண் பார்வையை, புருவத்தின் நடுவில் வைத்திருங்கள் ; கேசரி முத்திரை என்று இதனைக் குறிப்பிடுவர். வெளியெலாம் அடங்கியிருக்கும் புருவ நடுவில் எண்ணத்தையும் உயிர் மூச்சையும் ஒடுங்கியிருக்கச் செய்யும் வன்மையுடையது - தியானம்.
அகக் கண்ணால் காணும் ஆனந்தத்தை விவரிக்க இயலாது. முகக் கண்கொண்டு பார்ப்பது மூடத்தனம். அகக் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம் என்பதே திருமந்திரத்தின் கருத்தாகும். 

1 கருத்து:

  1. திருமந்திரம் கூறும் இக்கருத்தினை அனுபவத்தில் நான் உணர்ந்துள்ளேன். உண்மையில் சொல்லப்போனால் அகக்கண்ணால் காணும், பெறும் இன்பத்தை விவரிப்பது சிரமமே.

    பதிலளிநீக்கு