திங்கள், 9 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -16

மெய்ப்பொருள் காண்பது அறிவு -16
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யு மருளது வாமே.” –திருமந்திரம்.
அன்பினைப் பொருட்படுத்தாமல் வன்னெஞ்சினராய்த் திரிவாரையும் அவ்வன்பினைப் பெற்று மென்னெஞ்னராய் மேவி வாழ்வாரையும் சிவன் அறிந்து,அவரவர் செய்கைகட்கு ஏற்றவாறு முறையே துன்ப, இன்பங்களை அளிப்பான். அத்தகைய உகப்புடன் அருள் செய்யும் தலைமை சேர் முதல்வன், ஆருயிர்கள் முதற்கண் தொடர்புடையார்மாட்டு அன்புடையராய், அப்பயிற்சி மேலீட்டால் அனைத்துயிர்கள் மாட்டும் அருளுடையராய் ஒழுக வல்லார்க்கு மகிழ்ந்தன்பு செய்வான்; அதுவே அவன் திருவருளுமாகும்.
(இகழ்ந்தது- அன்பினைப் புறக்கணித்தது ; பெற்றது – மெய்யின்புற்றது ; கொழுந்தன்பு ; வளரும் அன்பு.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக