புதன், 25 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -32

மெய்ப்பொருள் காண்பது அறிவு -32
”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.”—திருக்குறள்.
முடிவேந்தனும் சான்றோரும் பாராட்டும் சிறப்புடைய பண்ணனை (சிறுகுடி கிழான் பண்ணன், பண்ணனது சிறுகுடி சோழநாட்டில், திருவீழிமிழலைக்கு அண்மையில், திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடப்பெற்ற ஊராகும்.)
ஆசிரியர் மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்  (புறநானூறு: 388.) இப்பாட்டின்கண் பாடுவாராய் “ இவனை யான் நாள்தோறும் பாடேனாயின் நன்றி கொன்றேன் என்னும் குற்றம்பற்றி என் பெருஞ் சுற்றத்தாரைப் பாண்டியன் அருள் செய்யாமல் ஒழிவானாக என்று பொருநன் கூறுவதாகக் கூறுகின்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக