செவ்வாய், 17 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -24

மெய்ப்பொருள் காண்பது அறிவு -24
தியானம்
” நெறிவழியே சென்று நேர்மை உள் ஒன்றித்
 தறி இருந்தாற் போல் தம்மை இருத்திச்
சொறியினும் தாக்கினும் துண்ணென்று உணராக்
குறி அறிவாளர்க்குக் கூடலும் ஆமே.” –திருமந்திரம்.
மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்கள் வழியாகப் பிராணனை மேலே செலுத்தி, நெற்றிக்கு நேர் புருவ மத்தியில் மனத்தை ஒன்றி நிற்க, அடித்த கட்டுத்தறி போல ஒரே இடத்தில் அசைவற்றுத் தம் உடலை இருக்கச் செய்து, பிறர் வந்து உடலைச் சொறிந்தாலும் அடித்துத் துன்புறுத்தினாலும் இவை எதையும் உணராது அடைய வேண்டிய இலட்சியமே குறியாக இருந்து தியானம் செய்பவருக்கு யோகம் எளிதாகக் கைகூடும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக