ஞாயிறு, 15 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -22

மெய்ப்பொருள் காண்பது அறிவு -22
“ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே” ---திருமந்திரம்.
காற்றைப் பிடிக்கும் கணக்கை அறிந்துகொண்டால் எமனையே எட்டி உதக்கலாம்.
காற்றை இடப்புற மூக்கின் வழியாக உள்ளுக்குள் இழுத்து, உள்ளே அடக்கி வைத்திருந்து பின்னர் வலப்புற மூக்கின் வழியாக வெளியிட வேண்டும்.   ஓம் – கொப்பூழுக்குப் பன்னிரண்டு விரல் அளவின் கீழுள்ளது மூலாதாரம் , அந்த மூலாதாரத்தைத் தூண்டித் தொழிற்படுத்தும் மந்திரம் இயற்கைச் செந்தமிழ் மறையாகிய “ஓம்.” ( வல்லுநர் வழிநின்று செய்முறை அறிக.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக