ஞாயிறு, 1 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :923


திருக்குறள் -சிறப்புரை :923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.--- ௯௨௩
கள் உண்டு களிப்பவனைக் காணும் பெற்றதாயின் முகத்திலேயே வெறுப்புத் தோன்றுமென்றால் ஒழுக்கத்தை உயிராகப் போற்றும் சான்றோர் முன் கள்ளுண்டு களித்தால் எப்படியிருக்கும்..?
”பிறன்மனை கள் களவு சூது கொலையோடு
அறன் அறிந்தார் இவ்வைந்தும் நோக்கார்….” ஆசாரக்கோவை.
அறவழி அறிந்த சான்றோர், பிறன் மனை நயத்தல், கள்ளுண்ணல், களவாடல், சூதாடல், கொலை செய்தல் ஆகிய இவ்வைந்து குற்றங்களையும் செய்வோரை விரும்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக