சனி, 21 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :943


திருக்குறள் -சிறப்புரை :943
அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு.---- ௯௪௩
(அளவு அறிந்து ; அஃது உடம்பு ; நெடிது உய்க்கும் ஆறு.)
முன்பு உண்ட உணவு செரித்தபின் அடுத்த வேளை உணவை அளவு அறிந்து உண்ண வேண்டும். அங்ஙனம் செரிக்கும் அளவும் அதற்கேற்றாற்போல உணவும் உண்டு வருவது  உடம்பை நீண்டகாலம் நோய் நொடியின்றி  நிலைத்து நிற்குமாறு செய்யும் வழிமுறையாகும்.
“கைப்பன எல்லாம் கடைதலை தித்திப்ப
மெச்சும் வகையால் ஒழிந்த இடை ஆகத்
துய்க்க முறை வகையால் ஊண்.” –ஆசாரக்கோவை.
உணவு உண்ணும்போது இனிப்பான கறிகளை முதலிலும் கசப்பான கறிகளை இறுதியிலும் ஏனைய கறிகளை இடையிலும் உண்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக