செவ்வாய், 3 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :925


திருக்குறள் -சிறப்புரை :925
கையறியாமை யுடைத்தே பொருள் கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.--- ௯௨௫
தன் கைப்பொருளைக் கொடுத்துக் கள்ளுண்டு, தன்னை அறியாது தானே மயங்கிக்கிடக்கும் செயல், ஒருவன்  தான் செய்வது இன்னதென்று அறியாத அறிவற்ற செயலாகும்.
” கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் பைங்கூழ்
விளைவின்கண் போற்றான் உழவும் இளையனாய்க்
கள் உண்டு வாழ்வான் குடிமையும் – இம்மூன்றும்
துக்கப் பிறப்பாய் விடும்.” ---திரிகடுகம்.
சுற்றத்தார்க்கு உதவாதவன் செல்வமும் பசுமைப்பயிர்போற்றித் தனக்குப் பயன் கொடுக்கும் காலத்துப் பாதுகாக்காதவன் உழவுத் தொழிலும் இளமைக் காலந்தொட்டே கள் உண்டு வாழ்வான் குடிப்பிறப்பும்  ஆகிய இம்மூன்றும் நிலைப்பன போலத் தோன்றிக் கெட்டழியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக