திங்கள், 23 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -30

மெய்ப்பொருள் காண்பது அறிவு -30
“மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் .”  மணிமேகலை.
நல்லறிவினை மயக்கும் கள்ளினையும் நிலைஉயிர்களைக் கொல்லுதலையும் அறிவுடையோர் தீயவை என விலக்கினர்.
“ நல்லறம் செய்வோர் நல் உலகு அடைதலும்
அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்.”
 நல்லறம் செய்வோர் இன்ப உலகம் அடைதலும் தீமை செய்வோர் அருநரகம் அடைதலும் உண்டு என்று அறிந்ததால் மனவலிமை உடையோர் அவற்றை நீக்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக