சான்றோர் வாய் (மை) மொழி :
163-அறிவியல்
சிந்தனைகள் - கன்பூசியஸ் – கன்பூசியஸ் –-கி.மு. 551 – 479. (Confucius)
சீன நாட்டில் தோன்றிய தத்துவஞானி. கடவுள், மதம், ஞானம் என எதையும் இவர் போதிக்கவில்லை. நடைமுறையில் மனிதன் ஏற்று ஒழுக வேண்டியவைகளை
மட்டுமே கூறினார்.
அன்புவழி,
அறநெறி, மனிதநேயம், சமுதாயம்,
பண்பாடு – மனிதன் வாழ்வதற்கும் வாழ்க்கையாப் புரிந்து
கொள்வதற்கும் மக்களைப் பண்படுத்தியவர். திருவள்ளுவரோடு வைத்து
எண்ணத்தக்க சிறந்த அறநெறியாளர், சீனத் தத்துவஞானி.
“பிறர் உங்களுக்கு எதைச் செய்யக்கூடாது என்று கருதுகிறீர்களோ அதை நீங்கள் பிறருக்குச்
செய்யாதீர்கள்.”
“ வாழ்க்கையைப்பற்றியே உனக்கு ஒன்றும் தெரியாதபோது
மரணத்தைப்பற்றி நீ என்ன தெரிந்துகொள்ள முடியும் ? ‘”
இவருடைய மூன்று குறிக்கோள்கள்:
1. அரசுக்குக் கடமையாற்றல்
2. இளைஞர்களுக்குக் கற்பித்தல்
3. சீனப் பண்பாட்டை எதிர்காலச் சந்ததியினருக்குப் பதிப்பித்தல்.
4. “மனிதன் மகிழ்ச்சியோடு நெறியோடும் வாழ்வது எப்படி
என்பதை கன்பூசியசைப் போல் அழகாகவும் தெளிவாகவும் எடுத்துக்கூறியவர் வேறு எவரும் இலர்.
மனித இனத்திற்குப் பயனுள்ள முறையில் இவரைவிட வேறு யாருமே
போதிக்கவில்லை.” வால்டேர்.
மேலை நாட்டுத்
தத்துவம் மதத்தோடு தொடர்புடையது
சீனநாட்டுத்
தத்துவம் அறிவுக்கலைகளோடு தொடர்புடையது.
சீனத் தத்துவ
மூலம் : யாங்
– யின் (Yang-Yin ) கொள்கை:
யாங் – ஆண்மை : படைக்கும்
ஆற்றல்
யின் – பெண்மை : கிரகிக்கும் ஆற்றல்.
(சிவ – சக்தி : தத்துவம் போன்றது.
கன்பூசியனிசம் – ( Confucianism )
“உலகம் முழுவதற்கும் ஓர் ஒழுங்கு
; ஒரு பொது ஒழுக்கம்; ஒரு பொது சமுதாயம் அமைய வேண்டும்
அதற்கு உலகப் பொதுத் திட்டம் ஒன்று வேண்டும்.”
இதற்கு அடிப்படை ஒரு பொது அறநெறி மனிதனின் செயல் அந்த
அறநெறியோடு இசைந்திராவிட்டால் மக்களும் அரசும் இயற்கை ஒழுங்கும் குழம்பிக்கிடக்கும்.
(கம்பன் விரும்பிய கோசலைநாடு போன்று
பொது நல நாடு- ( Grand Common Wealth )
ஒன்றினைப் படைத்துக்காட்டுகிறார். குடும்பம்,
அரசியல், சமுகம் ஆகியவற்றில் தனி மனித ஒழுக்கம்
முக்கிய பங்கு வகிக்கிறது.
………………………………கன்பூசியசு ……தொடரும்….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக