வெள்ளி, 21 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 176-அறிவியல் சிந்தனைகள்: அரிஸ்டாட்டில் – Aristotle; கி.மு. 384 – 322.

 

சான்றோர் வாய் (மைமொழி : 176-அறிவியல்

சிந்தனைகள்: அரிஸ்டாட்டில் – Aristotle; கி.மு. 384 – 322.

 

 கடவுள் உண்டு என்றார் :

ஒவ்வொரு மாற்றத்திற்கும் கடவுள் காரணமில்லைஇயக்கத்தின் தொடக்கமாகக் கடவுளைக் கருதுகின்றார் -  தான் இயங்காமல் பிறவற்றை இயக்கும் பேராற்றல் உடையதாய்உரு ஒன்று இல்லாதாய் குறைவில்லா நிறைவாய்உலக சக்திகளின் தொகுப்பே கடவுள் என்கிறார் -  கடவுளுக்கு விருப்பு வெறுப்பு இல்லை எனவே சடங்கு எதுவும் செய்யத்தேவையில்லை என்கிறார்.

ஆன்மா ஒரு சக்தி ;

 ஆன்மாவையும் உடலையும் கருத்தளவில் பிரிக்கலாமே தவிர நடைமுறையில் பிரிக்க முடியாது. பொருள்களைப் போல்ஆன்மாஅணுவால் ஆனதில்லை என்பதால் அழியக்கூடியதும் இல்லை எனப் பெறப்படும்.

 மனித வாழ்க்கை :

மகிழ்ச்சியைப் பெறுவதே வாழ்வின் குறிக்கோள், அஞ்சி ஒடுங்கும் கோழைத்தனம் ஓர் இறுதிநிலை. அஞ்சுதற்கு அஞ்சாமலிருப்பது இன்னொரு இறுதிநிலை. இவை இரண்டிற்கும் இடைப்பட்டநிலையே ஏற்புடைய வாழ்க்கை.

என்பதே அரிசுடாட்டில் கருத்தாம்.

 பெண்கள் :

பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டும், இது இயற்கையானது.  முப்பது வயது ஆண் இருபது வயது பெண்ணை மணந்தால் அவர்களுடைய பாலுணர்வு ஒத்தநிலை உடையதாகவும் ஒரே காலத்தில் நிறைவு பெறுவதாகவும் அமையும்.

 கல்வி :

கல்வியை அரசுதான் தரவேண்டும். சிறந்த குடிமகனுக்கு ஆணையிடவும் இடவும் தெரியவேண்டும் ; ஆணைக்குப் பணிந்து நடக்கவும் தெரிய வேண்டும்.

சமுக அமைப்பு :

 சமுதாயத்தோடு இணங்கி நடக்கத் தெரியாதவன் விலங்கானவன் .  மொழியால் சமுதாயமும் ; சமுதாயத்தால் அறிவும் ; அறிவால் ஒழுங்கும் ; ஒழுங்கால் நாகரிகமும் விளைகின்றன.

சமுகப் புரட்சியை வெறுக்கிறார். பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைத் தவிர்த்தால் சமுதாயத்தில் அமைதி நிலவும் என்கிறார்.

 ஆட்சி :

 திறமைக்கு முதலிடம் தரும் குழுவாட்சி முறையே குற்றங்கள் குறைந்த ஆட்சியமைப்பு. மக்களாட்சி சிறந்தது என்றாலும் எண்ணிக்கை பலம் சிலரின் சிந்தனைகளை அழித்துவிடும். மக்களாட்சித் தத்துவமும் குழுவாட்சித் தத்துவமும் கலந்ததொரு அரசியலமைப்பு சிறந்தது என்று கருதுகின்றார்.

 

முடிவுரை:

அரிசுடாட்டிலின் இறுதிக்காலம் அவலம் நிறைந்ததாகவே இருந்தது. அலெக்சாண்டரின் ஆதரவாளர் என்பதால் மக்கள் இவரை வெறுத்தனர். ஏதென்சை விட்டு வெளியேறி, மனம் நொந்து நஞ்சுண்டு இறந்தார்.

 கிரேக்க நாட்டின் தத்துவப் பூங்காக்கள் சிந்தனை நீரின்றி வறட்சியால் பட்டுப்போயின.

…………………..தொடரும் ………………………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக