திங்கள், 3 மார்ச், 2025

கன்பூசியசு -2 சான்றோர் வாய் (மை) மொழி : 164-அறிவியல் சிந்தனைகள் -

 

கன்பூசியசு -2

சான்றோர் வாய் (மைமொழி : 164-அறிவியல்

சிந்தனைகள்  -  கன்பூசியஸ்.

ஓர் அரசியல் வாதி….?

 ஒரு நல்ல அரசுக்கு வேண்டப்படுவது …….

போதுமான உணவு

போதுமான படை பலம் .

பொது மக்களின் நம்பிக்கை. ”

 

மக்களின் நம்பிக்கையே முதன்மையானது அஃதில்லையேல் அரசு இல்லை .

ஆளுவோர் தவறிழைக்கும்போது ஆளும் உரிமையை இழந்து விடுவர்.”

 

கல்வியாளர்:

கல்வி அறிவின் அடிப்படையில் வழங்க வேண்டும். அனைவரும் கல்வி பயில வாய்ப்பளித்தவர்.  ஒரு செய்தியின் ஒரு மூலையை நான் தெளிவாக எடுத்துக்காட்டிய பிறகு மற்ற மூன்று மூலைகளையும் தானாகவே கண்டுபிடிக்க முடியாதவனுக்கு நான் மேலும் கல்வி போதிக்க மாட்டேன்.

 போதனா முறை என்பது மாணவனின் தலைக்குள்  அறிவுகளைத் திணிப்பது அல்ல ;  அவன் சுயமாகச் சிந்திப்பதுதான்.”

 

 அறிவுக்காக அறிவை  அடைதைவிட தன்னைப் பண்படுத்தி வளர்ப்பதற்காக அறிவு பெறுவதுதான் கல்வியின் உண்மையான பயன்.”  

 

 சிந்தனை இல்லாத படிப்பு வீணானது ; படிப்பில்லாத சிந்தனை ஆபத்தானது.”

சட்டங்களும் தண்டனைகளும் மக்களைத் திருத்திவிட முடியாது .; கல்விக்கு ஈடானது எதுவும் இல்லை.”

 

 தத்துவஞானி :

ஜீன் அல்லது மனித உள்ளம் படைத்திருத்தல், இவரது கொள்கை.ஜீன் என்பது பிறர் மீது அன்பு  செலுத்துதல்.”

 

ஒரு வாலிபன் வீட்டிலிருக்கும்போது பெற்றோர் பக்தியும் வெளியே இருக்கும்போது சகோதர அன்பையும் பயில வேண்டும். அவன் மனப்பூர்வமாகவும் தீவிரமாகவும் எல்லோரையும் நேசிக்க வேண்டும்.

 

மனித ஜீவன்கள் மீது அன்பு செலுத்துவதுதான்  மனிதப்பண்பு ; மனிதர்களைப் புரிந்துகொள்வது விஞ்ஞானம்.,”

 

 இயற்கைவாதி:

மனிதன் இயற்கையோடியைந்து வாழ வேண்டும்.. வானம் உன்னதமான ஆத்மிக இயக்கம் ; அது இயற்கையின் சக்தியே தவிர இறைவன் எனப்படும் ஓர் ஆள் அல்ல ; மக்கள் அனைவரும் வானகத்தின் முன் ஒரு பொது மனித சமுதாயக் கூட்டம்.

கன்பூசியசு ஒரு மாபெரும் சிந்தனையாளர், காலங்கடந்தும் இன்றும் அவர் கொள்கைகள் கோட்பாடுகள் சீனாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அறிவியல் சிந்தனையாளர் 72- வயதில் இயற்கை எய்தினார்.

இவர் எழுதிய நூல்கள் நான்கு .

தொகுத்த பழம்பெரும் இலக்கியங்கள் ஐந்து.

 பதினைந்து ஆண்டுகள் நாடோடியாக அலைந்து திரிந்து மக்களிடையே  கருத்துகளைப் பரப்பினார்.

………………………தொடரும்…………………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக