சான்றோர் வாய் (மை) மொழி :
162 அறிவியல்
சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . எழுச்சியும்
வீழ்ச்சியும்.
வரலாறு
நம்மாழ்வார், தஞ்சை மாவட்டத்தில் 06 ஏப்ரல் 1938 ஆம்
ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை ச. கோவிந்தசாமி பார்புரட்டியார் மற்றும் தாயார்
அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள் ஆகியோர் ஆவார்.(சான்று த.ரெ.தமிழ்மணியின்
நம்மாழ்வார் வாழ்க்கைக் குறிப்பு நூல்) இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப்
பட்டம் பெற்றார். 2007 ஆம் ஆண்டு
காந்திகிராம பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு
உதவியாளராகப் பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது
செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில்
வெளியேறினார். 1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை இவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார்.
ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்காவால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார்.
எதிர்த்துப் போராடியவை
·
மீத்தேன் வாயு திட்டம், இந்தியா
·
மரபணு சோதனைகள்
·
பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி
·
வெளிநாடுகளில்
இருந்து உணவு தானியங்கள் இறக்குமதி
·
விவசாய நிலங்களை வேறு
நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்
களப்பணிகள்
·
சுனாமியினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட நிலங்கள் சீரமைப்பு[2]
·
இந்தோனேசியாவில்
சுனாமி பாதிக்கப்பட்ட பகுதியில் 30 மாதிரி பண்ணைகள்
அமைத்தல்
·
60க்கும் மேற்பட்ட கரிம விவசாய பயிற்சி மையங்களை
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் நிறுவினார்.
·
மீத்தேன் எடுக்க
எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தார்.
·
"தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின்
கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு
கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தினார்.
"பேரிகை' என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை
வெளியிட்டார்.
நடைப் பயணங்கள்
·
1998 - கன்னியாகுமாரி - சென்னை - சுதேச பயிர்
வளர்ப்பின் முக்கியத்துவத்திற்காக
·
2002 - 25 நாட்கள் பாத யாத்திரை ஈரோடு மாவட்டம் -
அங்கக வேளாண்மைப் பிரச்சாரம்.
·
2003 - பூம்புகார் முதல் கல்லனை வரை 25 நாட்கள் - கரிம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம்
·
2002 - இயற்கை உழவாண்மைகாக ஈரோடு மாவட்டம் பவானி
சாகர் அணையில் இருந்து கொடுமுடி வரை 25 நாள் நடைபயணம்
மேற்கொண்டார்.[3]
உருவாக்கிய அமைப்புகள்
·
1979ல் குடும்பம்
·
1990 லிசா (1990 – LEISA Network)[4]
·
1990 – மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம், கொலுஞ்சி , ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை
மாவட்டம்
·
இந்திய அங்கக
வேளாண்மை சங்கம் (Organic Farming Association of India)
·
நம்மாழ்வார் உயிர்
சூழல் நடுவம்
·
வானகம்,
நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் உலக உணவு பாதுகாப்பிற்கான பண்ணை ஆராய்ச்சி
மையம்
·
தமிழின
வாழ்வியல் பல்கலைக்கழகம்
படைப்புகள்
·
தாய் மண் (இயற்கை வழி
உழவாண்மை பாடநூல்), வெளியீடு: வானகம்
·
உழவுக்கும் உண்டு வரலாறு (நூல்) விகடன் வெளியீடு
·
தாய் மண்ணே வணக்கம் (நூல்) நவீன வேளாண்மை வெளியீடு
·
நெல்லைக் காப்போம்
·
வயிற்றுக்குச்
சோறிடல் வேண்டும், இயல்வாகை வெளியீடு
·
இனி விதைகளே
பேராயுதம், இயல்வாகை வெளியீடு
·
நோயினைக்
கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
·
எந்நாடுடையே இயற்கையே
போற்றி, விகடன் வெளியீடு
·
பூமித்தாயே,
இயல்வாகை வெளியீடு
·
நோயினை கொண்டாடுவோம்,
இயல்வாகை வெளியீடு
·
மரபை
அழிக்கும் மரபணு மாற்று விதைகள் (நூல்) வாகை
வெளியீடு
·
களை எடு கிழக்கு பதிப்பகம்
விருதுகள்
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்,
இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திகிராம கிராமப்புற
நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.[5]
இறப்பு
இவர் 2013 திசம்பர் 30 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்காடு சிற்றூரில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு
காலமானார்.
“ விக்கிபீடியா.
அறிவியல்
எழுச்சி என்று இந்தியா முழுவதும் புசுமைப்புரட்சி
செய்தவை அத்தனையும் மனிதகுலத்திற்குத் தீங்கு விளைவிப்பவை என்று நாடு முழுதும் வேளாண்விஞ்ஞானி
கோ.
நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை குறித்துப் பரப்புரை மேற்கொண்டு மண்ணையும் மக்களையும் காப்பாற்றினார்.
இன்று
நம் நாட்டு மக்கள் இயற்கை விளைபொருள்களை நாடி
ஓடுகின்றனர்.
நோய் நொடிகளிலிருந்து விடுதலைபெற. கம்பு,
சோளம். குதிரைவாலி, சாமை
மாப்பிள்ளைச்சம்பா, கருக்கவுணி, தூயமல்லி
இன்னபிற அரிசிவகைகளைத் தேடி ஓடுகின்றனர்.
அன்றாடம்
வேதியல் கலவைகளைக் கொண்டு உற்பத்தியான பற்பசை, (கரி இருக்கிறது, சுண்ணாம்பு இருக்கிறது என்றும் ஊட்டசத்து மாவுகள் இன்று சிறுதானிய வகைகளைக்
கொண்டு உற்பத்தி செய்கின்றன.)
ஐயா
நம்மாழ்வார் தோற்றுவித்த இயற்கை வாழ்வியல் தமிழ் மண்ணில் வேரூன்றி, செழித்து வளர்ந்துவருவதைக் கண்கூடாகக் காண்கிறோம்.
அறிவியல் மோசடி:
செறிவூட்டல்.
இன்று வேளாண் ஆராய்ச்சியாளர்கள் செறிவூட்டல்
என்னும் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தி
இயற்கையை அழித்து வருகின்றனர்.
கொடுமைகள்
:
நெல்லிக்காயின் அளப்பரிய ஆற்றலை நாம் நன்கறிவோம்; இஃது உயிர் காக்கும் ஒப்பற்றமருந்தும் உணவுமாகும். இந்த நெல்லிக்காயைச் செறிவூட்டி பேரிக்காயாக
மாற்றிய கொடுமையை என்னென்பேன் ?
மேலும் அரிய நெல் வகைகளை கண்டெடுத்த நெல் செயராமன்
இயற்கை வேளாண்மையை நாடு முழுதும் அரும்பாடுபட்டுக் கொண்டு சேர்த்தார். இந்த அரிய வகை நெற்பயிர்களின் வாழ்நாளைக் குறைக்கப்
போகிறார்களாம் ; என்ன கொடுமை இது..?
............................................தொடரும்..............................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக