வியாழன், 2 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :475

திருக்குறள் – சிறப்புரை :475
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.௪௭௫
மயில் இறகுதானே,  எடை குறைவு என்று கருதி வண்டியில்  அளவுக்கு அதிகமாக ஏற்றினால் எடைகூடிச் சுமைதாங்காது வண்டியின் அச்சு முறிந்து விடும்.
வலிமைக்கும் எல்லையுண்டு என்பதறிக.
“ சீர் உடை ஆண்மை செய்கையின் அறிப.”  முதுமொழிக்காஞ்சி.
முயற்சியின் வலிமை, முடிக்கும் செயலால் அறியப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக