வியாழன், 23 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :496

திருக்குறள் – சிறப்புரை :496
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து. ----- ௪௯
வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர் கடலில் ஓடாது ; கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது.
 எந்த ஒன்றின் இருப்பும் இயக்கமும் அதனதன் இடத்திலேதான் பெருமைபெறும் ; இஃது இயற்கையின் நியதி. இடம் மாறினால் தடம் மாறும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக