புதன், 29 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :502

திருக்குறள் – சிறப்புரை :502
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு. --- ௫௰௨
ஒருவனைத் தெரிந்து தெளிவதாவது அவன் நற்குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழிக்கு அஞ்சும் பண்புடையவனாக இருத்தல் வேண்டும். இத்தகைய பண்புடையவன் ஒருவனையே தேர்ந்து தெளிதல் வேண்டும்.
“ ஆன்றோர் செல்நெறி வழாஅச்
  சான்றோன் ….. “ —நற்றிணை.
ஆன்றோர் போற்றிய நெறிகளைத் தவறாது பின்பற்றும் சான்றோன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக