வியாழன், 30 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :503

திருக்குறள் – சிறப்புரை :503
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. --- ௫௰௩
கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும் நுண்ணிதாக ஆராயுமிடத்து வெண்மை
இல்லாமை அரிது. (வெண்மை – அறியாமை…) --பரிமேலழகர்.
:” கல்வி கரையில கற்பவர் நாள் சில.” -- நாலடியார்.
கல்வி எல்லையற்றது ; கற்பவர்களின் நாட்கள் சிலவே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக