வெள்ளி, 3 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :476

திருக்குறள் – சிறப்புரை :476
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி ஆகி விடும்.௪௭௬
 ஒரு மரத்தின்கிளை நுனிக்கு ஏறிய பின்னும்  ஊக்கம் கொண்டு மேலும் மேலேற முயற்சித்தால் அவ்வூக்கம் உயிருக்கு இறுதியைத்தான் கொடுக்கும்.
வலிமை அறியாமல் கொள்ளும் ஊக்கம் கேடு விளைவிக்கும்.
“ சிறுமுயற்சி செய்து ஆங்கு உறுபயன் கொள்ளப்

 பெறும் எனில் தாழ்வரோ தாழார்…..  நீதிநெறிவிளக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக