திங்கள், 6 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :479

திருக்குறள் – சிறப்புரை :479
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். --- ௪௭௯
வருவாயின் அளவு அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் வாழ வழி தெரியாதவன் வாழ்க்கை,  எல்லாம் இருப்பதுபோன்ற மாயத் தோற்றத்தைத் தந்து உள்ளவை எல்லாம் இல்லாதாகி அழியும்.
“ பரபரப்பினோடே பல பல செய்து ஆங்கு
இரவு பகல் பாழுக்கு இறைப்ப ஒருவாற்றான்
நல்லாற்றின் ஊக்கின் பதறிக் குலைகுலைப

எவ்வாற்றான் உய்வார் இவர்.நீதிநெறிவிளக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக