புதன், 8 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :481

திருக்குறள் – சிறப்புரை :481
காலம் அறிதல்
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. --- ௪௮௧
இரவில் வேட்டையாடும் வலிமையுள்ள கோட்டானைப் பகல் பொழுதில் காக்கை வென்றுவிடும் அதுபோல, பகையை வெல்லக் கருதும் வேந்தன் காலம் அறிந்து களத்தில் இறங்க வேண்டும்.
“ காலம்அறிந்து ஆங்குஇடம் அறிந்துசெய் வினையின்
மூலம்அறிந்து விளைவுஅறிந்து மேலும் தாம்
சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்து
ஆள்வினை ஆளப் படும். --- நீதிநெறிவிளக்கம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக