செவ்வாய், 7 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :480

திருக்குறள் – சிறப்புரை :480
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும். ----- ௪௮௰
தன்னிடமுள்ள பொருளின் அளவினை ஆராய்ந்தறியாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினாலும் செல்வவளம் விரைந்து தேய்ந்து அழியும்.
“ தன் அறி அளவையின் தரத்தர யானும்
 என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு
 இன்மை தீர வந்தனென் ” --- பொருநராற்றுப்படை.

கரிகாலன் , தன் தகுதி அறிந்து தரத்தர, யானும் என் தகுதியின் அளவு அறிந்து விரும்பியவற்றை யெல்லாம் வாரிக்கொண்டு, இனி எக்காலமும் எனக்கு வறுமை இல்லையாகும்படி வந்தேனாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக