ஞாயிறு, 5 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :478

திருக்குறள் – சிறப்புரை :478
ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடுஇல்லை
போகாறு அகலாக் கடை.௪௭௮
வருவாய் வரும் வழி சிறியதாயினும் பொருட் செலவுஆகும் வழி அகலமாக இல்லாதிருந்தால் கேடு ஒன்றும் ஏற்படாது. கொள்வழி அகன்றும் செல்வழி சிறுத்தும் இருத்தல் நன்று.
“ ஆனமுதலில் அதிகம் செலவானால்
 மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை
 எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
 நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.” --- நல்வழி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக